Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மக்கள் டிவியில் வீரப்பன்
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சந்தனக்காடு என்ற மெகா தொடர் பாமகவின் மக்கள் டிவியில் அக்டோபர் 15ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
Click here for more images |
திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.
வீரப்பனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இதில் இடம் பெறுகின்றன. வீரப்பனின் நல்ல குணங்கள், மோசமான செயல்கள், தமிழ் மீது கொண்டிருந்த பற்று உள்ளிட்டவை இதில் விவரிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கெளதமன் கூறுகையில், வீரப்பனின் வாழ்க்கையில் இடம்பெற்ற அனைத்து முக்கிய சம்பவங்களும் இதில் இடம் பெறும்.
காவல் நிலையங்கள் மீதான தாக்குதல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினையின்போது தமிழர்கள் பட்ட சித்திரவதை, அதுதொடர்பாக வீரப்பன் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.
இந்தத் தொடரை ஒளிபரப்ப வீரப்பனின் மனைவி நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியிருந்தார். அவரை சமாதானப்படுத்தி தற்போது தடையை விலக்கியுள்ளோம்.
மேட்டூர், சத்தியமங்கலம் வனபப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த சீரியல் படமாக்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படை வீரர்கள் அப்பாவி மலை வாழ் மக்களை சித்திரவதைப்படுத்திய சம்பவங்களும் கூட இதில் இடம் பெறுகின்றன என்றார் அவர்.