twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதையில் மீண்டும் நடிகை சங்கீதா ரகளை

    By Staff
    |

    Sangeetha
    குடிபோதையில் நடுரோட்டில் ஆபாசமாக ஆடி சர்ச்சையை ஏற்படுத்தி போலீஸாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நடிகை சங்கீதா, போதை மாத்திரை சாப்பிட்டு ஆட்டோ டிரைவருடன் ரகளை செய்து மீண்டும் பிடிபட்டுள்ளார்.

    புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர் புதுமுக நடிகை சங்கீதா. அதன் பின்னர் விபசாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள தமிழ்நாடு தியேட்டர் அருகே கடந்த 22ம் தேதியன்று நள்ளிரவில் குடிபோதையில் ஆடைகளை அவிழ்த்து விட்டு ஆபாச நடனம் ஆடினார். இதனால் அந்த நேரத்திலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போதை தெளிந்த நிலையில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பினார் சங்கீதா. இதனால் போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் 23ம் தேதி காலை வியாசர்பாடியில் உள்ள பிளாட்பாரத்தில் அவர் படுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். தகவல் அறிந்ததும் சங்கீதாவின் வக்கீல் வந்து அவரை அழைத்துச் சென்றார்.

    இந்த சூழ்நிலையில் மறுபடியும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சங்கீதா தகராறில் ஈடுபட்டார். குடிபோதையில், சாலையில் வந்தவர்கள், போனவர்களிடம் அவர் தகராறு செய்தார். ஆட்டோ டிரைவர்களுடனும் தகராறு செய்தார்.

    பிறகு ஒரு ஆட்டோவில் ஏறிய அவர் மணிக்கூண்டு பகுதிக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அவரைப் பார்த்த போலீஸார், மீண்டும் அவரைப் பிடித்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

    அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X