Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொட்டால் பூ மலரும் ஆடியோ
இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி ஹீரோவாக அறிமுகமாகும் தொட்டால் பூ மலரும் படத்தின் ஆடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட அதன் முதல் பிரதியை கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
சந்திரமுகியை முடித்த கையோடு தனது மகன் ஷக்தியை (சின்னத் தம்பி படத்தில் குட்டி பிரபுவாக வந்தாரே, அந்தப் பையன்தான் இப்போது வளர்ந்து வாலிபனாகி, ஹீரோவாகவும் மாறி விட்டார்) ஹீரோவாகப் போட்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் வாசு. இதில் ஹீரோயினாக கௌரி முஞ்சல் நடிக்கிறார்.படம் முடிந்து விட்டது. ஆனால் அடுத்த ரஜினி படம் குறுக்கிட்டு விட்டதால் படத்தை ஒத்தி வைத்துள்ளார் வாசு. பட பூஜையின்போது ரஜினியும், கமலும் இணைந்து கலந்து கொண்டு ஷக்தியை ஆசிர்வதித்தார்கள். சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதிலும் இருவரும் கலந்து கொண்டனர்.
கேசட் வெளியீட்டுக்குப் பின்னர் வாசு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நானே நடிகராக வர வேண்டும் என முன்பு நினைத்தவன்தான். ஆனால், இயக்குநராகி விட்டேன்.
எனது இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது எனது மகனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு கடு கடுப்பான, கண்டிப்பான மன நிலையில் அவன் என்றுமே என்னைப் பார்த்ததில்லை என்றார் சிரித்துக் கொண்டே.
ஹீரோ ஷக்தி பேசுகையில், நடிகராக வேண்டும் என்ற எனது தந்தையின் ஆசை நிறைவேறவில்லை. அதை நான் நிறைவேற்றி வைத்துள்ளேன்.
கடுமையாக உழைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக கடுமையாக பாடுபடப் போகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனது குரு. அவர் எனக்கு நிறைய அட்வைஸ் செய்துள்ளார். நடிப்புக்கு சில டிப்ஸ்களையும் கூட கொடுத்துள்ளார் என்றார்.