Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஸ்பெஷல்ஸ்
பாய்ஸ் பட எதிர்ப்பால் துவண்டு போயிருந்த ஷங்கருக்கு ஆறுதல் கூறி தனது புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
ஏ.எம்.ரத்னத்தின் பிரமாண்ட தயாரிப்பான பாய்ஸ் படு பயங்கர எதிர்ப்பை சம்பாதித்ததுடன், பெரும் நஷ்டத்தையும் கொடுத்துவிட்டதால், அப்செட் ஆகிப் போன ஷங்கர் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். ரத்னமோ தனது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிவரும் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் ஷங்கரை போனில் பிடித்த ரவிச்சந்திரன், பாய்ஸ் தோல்வியால் துவள வேண்டாம். எனது படத்தை நீங்கள்தான்இயக்குகிறீர்கள் என்று கூறியுள்ளார். அவரது ஆறுதல் பேச்சால் சந்தோஷமான ஷங்கர் உடனடியாக ஓ.கே சொல்லி விட்டார்.
ஊர் திரும்பியவுடன் புதிய படத்தை இயக்கப் போகிறார் ஷங்கர். இதில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது. அவருக்குஜோடியாக அனேகமாக திரிஷா நடிக்கலாம். இந்தப் படத்தின் கதை ஏற்கனவே ஷங்கரிடம் உள்ளதால், உடனடியாக படப்பிடிப்புதொடங்கும் என்று கூறப்படுகிறது.
கமான், ஷங்கர்!