Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெள்ளிவிழா கொண்டாடும் பாடகர் மனோ!
இந்த வெள்ளிவிழா ஆண்டில் அவரைக் கவுரவிக்கிறது சாதகப் பறவைகள் இசைக்குழுவும் கல்யாணகல்பா நிறுவனமும்.
மனோவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே... என்பதுதான் இவர் முதலில் பாடி பாட்டு.
இந்த ஒரே பாட்டில் அவர் பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து ரஜினிக்கு வரிசையாக பாடும் அளவுக்கு முன்னணிக்கு வந்தார். ரஜினி மட்டுமல்லாது, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அவர் பாடிவிட்டார். அத்தனை இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும், இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார்.
பாடுவதோடு நில்லாமல், சில படங்களில் நடிக்கவும் செய்தார். குறிப்பாக கமல்ஹாஸனுடன் சிங்காரவேலன் படத்தில் இவரும் கவுண்டமணியும் சேர்ந்து அடித்த லூட்டியை மக்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
இதுதவிர, 250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மனோவின் 25 வருட கலையுலகப் பயணத்தை கவுரவிக்கும் வகையில சாதகப் பறவைகள் சங்கர் மற்றும் கல்யாண கல்பா நிறுவன நிர்வாக இயக்குநர் ராதிகா ஆகியோர் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதகப் பறவைகள் குழுவினர் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க மனோ பாடும் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.
திரையுலக நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் இதில் பங்கேற்று மனோவை வாழ்த்துகின்றனர்.
ஜனவரி 26-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!