twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகனுக்காக சோனாவிடம் சமரசம் பேசிய எஸ்பி பாலசுப்பிரமணியன்!

    By Shankar
    |

    SP Balasubramaniyan and SPB Charan
    கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசியிருப்பதுதான்!

    மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மதுவிருந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைகளைக் களைந்து, பலாத்காரம் செய்ய முயன்றார் என எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    போலீசார் எந்த நேரமும் சரணை கைது செய்யலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சரண். அதில் இந்தப் பிள்ளையும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி, 'சோனாவை நான் தொடவே இல்லை. குடித்துவிட்டு என் மேல் விழுந்த சோனாவை பாலுணர்வை தூண்ட வேண்டாம் என எச்சரித்தேன்,' என்று கூறியிருந்தார். அவரது இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சினிமாக்காரர்களே சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.

    இன்னொரு பக்கம், அந்த மானபங்க சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலிருந்து சண்டையை விலக்கிவிட்டதாகக் கூறப்படும் மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களையும் விசாரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த மூவரும் இப்போது இருக்குமிடமே தெரியவில்லையாம்!

    மருத்துவமனையில் சந்திப்பு...

    இந்த நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியன், கைது, வழக்கு என தொடரவிருக்கும் அவமானங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சமாதானம் பேச முயன்றுள்ளார்.

    நேற்று மாலை, சோனா தங்கி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், சோனாவை நலம் விசாரித்துள்ளார். உடம்பை பாத்துக்கோம்மா என்று அக்கறையாகச் சொன்ன எஸ்பிபி, நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சரண் தன்னிடம் அத்துமீறியதற்கு ஆதாரமாக தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் படங்களையும் சோனா காட்டியதாகவும், அவரது மோசமான நடத்தை மற்றும் மிரட்டல் தந்த மன உளைச்சல்தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் சோனா உருக்கமாகத் தெரிவித்தாராம்.

    மகன் மீதுள்ள தவறைப் புரிந்து கொண்ட எஸ்பிபி, விரைவில் சரணை நேரில் அனுப்பி மன்னிப்பு கேட்க வைப்பதாகவும், பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் தர வைப்பதாகவும் உறுதியளித்துள்ளாராம்.

    ஏற்கெனவே எஸ்பிபி சரண் படம் தயாரித்து நஷ்டமடைந்ததன் விளைவாக, தனது ஸ்டுடியோவையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது சோனாவைச் சந்தித்து சமாதானம் பேசும் நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது சரணின் செயல் என்கிறார்கள் திரையுலகினர்.

    இதற்கிடையே, சரணின் முன்ஜாமீன் மனு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    English summary
    Legendary playback Singer S P Balasubramaniyam has met glam girl Sona at a City Hospital on Monday. According to sources, the singer wanted to settle the sexual abuse complaint of the actress on his son SPB Charan amicably.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X