Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என் கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி -சுமா
எனக்கு ஜீவனாம்சம் தரவிட்டால் சும்மா விட மாட்டேன் என தனது கணவர் பண்டி வாலியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் நடிகை சுமா ரங்கநாத்.
தமிழில் சில படங்களில் நடித்துள்ள சுமா ரங்கநாத் அடுத்து இந்திக்கு தாவினர். அங்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடினர்.ஏற்கனவே விவாகரத்தான இந்திப் பட தயாரிப்பாளர் பண்டி வாலியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.
தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 2 லட்சம், மும்பை அருகே பாலி கில் பகுதியில் ஒரு வீடு, ஒரு கார் தர வேண்டும் என பண்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார் சுமா.
ஆனால், சுமாவுக்கும் உடற் பயிற்சியாளர் ஒருவருடனும், இன்னொரு நபருடனும் கள்ளத் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினர் பண்டி.
பண்டி வாலியாவின் குற்றச்சாட்டு குறித்து சுமாரங்கநாத் நிருபர்களிடம் கூறியதாவது,
பண்டி வாலியா ஒரு சந்தேகப் பேர் வழி. நண்பர்களை கூட சந்தேகிப்பவரிடம் எப்படி குடும்பம் நடத்த முடியும். இனி அவருடன் சேர்ந்து வாழ்வது என்பது இயலாத காரியம். அவர் மரியாதையாக ஜீவனாம்சம் கொடுத்தால் சும்மா இருப்பேன். இல்லையென்றால் அவரை சும்மா விட மாட்டேன். என்னை சித்தரவதை செய்தார் என்று போலீஸில் புகார் கொடுப்பேன் என்கிறார் சுமா ரங்கநாத்.