Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சுரேஷ்கிருஷ்ணாவின் அடுத்த டார்கெட்!
பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற மாபெரும் தோல்விப் படத்தைக் கொடுத்த தனுஷ் மார்க்கெட்டை ஒரு தினுசாக மாற்றிய சுரேஷ் கிருஷ்ணா அடுத்து சிபியை ஒரு கை பார்க்கப் போகிறாராம்.
வீரா, அண்ணாமலை என ரஜினிக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அதே ரஜினியை வைத்துத்தான் பாபா என்ற மறக்க முடியாத படத்தையும் கொடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா.கமல்ஹாசனை வைத்து சத்யா, இந்திரன் சந்திரன், ஆளவந்தன் என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவரான சுரேஷ் கிருஷ்ணா சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார். சுரேஷ் கிருஷ்ணாவின் சமீபத்திய சூப்பர் டூப்பர் தோல்விப்படம் பரட்டை என்கிற அழகுசுந்தரம்.
இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் புரியவில்லை. அந்த வேகத்தில் படம் இருந்ததால் தனுஷுக்கு, மறக்கப்பட வேண்டிய படப் பட்டியலில் பரட்டை சேர்ந்து விட்டது.
இந்த நிலையில், அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. சிபிராஜிடம் கதை ஒன்றை சொல்லியுள்ளார். அவரும் கேட்டு திருப்தி தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
லீ படத்திற்குப் பின்னர் பல கதைகளைக் கேட்டும் எதிலும் திருப்தி வரவில்லையாம் சிபிக்கு. இந்த நிலையில்தான் சுரேஷ் கிருஷ்ணாவின் கதை அவரைக் கவர்ந்துள்ளதாம். இப்படத்திலும் ஆக்ஷன் ஹீரோவாகவே நடிக்கிறாரா அல்லது வித்தியாசமான வேடம் பூணுகிறாரா என்று தெரியவில்லை.
சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ்கிருஷ்ணா. எனவே சிபிக்கும் அவர் சிறப்பான வெற்றிப் படத்தைக் கொடுப்பார் என நம்பலாம்.
முன்னதாக கரணிடம் இந்தக் கதையை சொன்னாராம் கிருஷ்ணா. அவர் கும்பிடு போடவே சிபியைப் பிடித்தாராம்.