Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'கற்பு'-சுஷ்மிதா மீது மதுரையில் வழக்கு
கிரீஷ்குமார் என்பவர் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரபல இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் அக்டோபர் மாதம் 7ம் தேதி தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியின்போது, இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பிறகும் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தவறில்லை. இதெல்லாம் இன்றைய கால கட்டத்தில் சாதாரணமான ஒன்று. இந்தியர்கள் எவருக்கும் கற்பு இல்லை என்றார்.
அவரது பேச்சு என்னைப் இந்தியர்களின் மனதை புண்படுத்தி விட்டது. அவரது பேச்சை கேட்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடும்.
எனவே அவதூறாக பேட்டி கொடுத்த சுஷ்மிதாசென் மீது பாலியல் பற்றி மலிவாக விமர்சித்தல், அவதூறாக பேசுவது, பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, சுஷ்மிதா சென் வருகிற ஜனவரி 7ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஏற்கனவே தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேசிய நடிகை குஷ்பு பெரும் சர்ச்சைக்கு ஆளானார். அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன. இப்போது கற்பு குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஷ்மிதா.
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!