Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிமுக பிரச்சாரத்துக்கு வருவாரா எஸ்.வி.சேகர்?!
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரு கட்சிகளையும் சேர்ந்த திரைப்படநடிகர், நடிகையர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதிமுகவின் சார்பில் பிரச்சார பீரங்கியான குண்டு கல்யாணம், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், தாமு, பாண்டியன், நடிகைகள்பிந்துகோஷ், சி.ஆர்.சரஸ்வதி, வாசுகி ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள்.
திமுக சார்பில் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் களமிறங்குகின்றனர். இரு தொகுதிகளிலும் 3 நாட்களுக்குசரத்குமார் பிரசாரம் செய்கிறார். அதேபோல, நெப்போலியன், கும்மிடிப்பூண்டியில் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும்பிரசாரம் செய்கிறார்.
இவர்கள் தவிர சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாத சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து ஆகியோரும் திமுகவுக்காக பிரசாரம்செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை அதிமுகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தில் எஸ்.வி.சேகர் ஈடுபடுவரா என்பது தெரியவில்லை.
காஞ்சி மடத்தின் தீவிர பக்தரான இவர், சங்கராச்சாரியார்களின் கைதுக்குப் பின் தீவிர அமைதி காத்து வருகிறார். தனது டிரேட்மார்க் காவி கலர் க்ரோக்கடைல் டி-சர்ட்டுக்கும் விடை கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பிடித்த பச்சை வண்ணம் உள்ளிட்டடி-சர்ட்களில் வலம் வருகிறார்.
பெரியவர், இளையவரை தரிசிக்க சென்று வந்த அதே காஞ்சியில் இப்போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் எஸ்.வி.சேகர்.
இதனால் அவர் பிரச்சாரத்துக்குப் போவாரா அல்லது வேறு எங்காவது நாடகத்தை பிக்ஸ் செய்துவிட்டு அலேக் ஆவாரா என்றுதெரியவில்லை.
தேர்தல் பிரச்சார விஷயத்தில் சேகரின் நடவடிக்கையை அதிமுக தலைமை தீவிரமாக கண்காணிக்கப் போவது மட்டும் உறுதி.