Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தங்கருக்கே 'ஒன்பது ரூபாய் நோட்டு'!!
இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பும் முன்பாக புதுச்சேரிக்குச் செல்ல முடிவு செய்தார். காரணம் புதுச்சேரியிலிருந்துதான் தமிழகத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்கும் திருட்டு விசிடிகள் விநியோகம் அமோமாக நடந்து வருகிறது.
எனவே தனது ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் திருட்டு விசிடிக்கள் விற்பனை நடக்கிறதா என்பதை அறிய புதுச்சேரிக்கு விசிட் அடித்தார்.
குபேர் நகர் பகுதியில் கடை கடையாக சென்றார். அவரை இயக்குநர் என்று தெரியாத சிலர் சார், ஒன்பது ரூபாய் நோட்டு சிடி இருக்கிறது, வேண்டுமா என்று கேட்டுள்ளனர். அதிர்ந்து போன தங்கர், அந்தக் கடை முழுவதும் தீவிரமாக சோதனை போட்டார். அப்போது குவியல் குவியலாக ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவற்றின் திருட்டு விசிடிக்கள் சிக்கின.
மேலும் பல்வேறு புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களும் அங்கு இருந்தனன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் விசிடிக்களை ஒப்படைத்தார் தங்கர்.
இதேபோல நகரின் வேறு சில பகுதிகளிலும் அதிரடியாக சென்று சோதனை போட்டு திருட்டு விசிடிக்களைப் பிடித்தார். சமீபத்தில் வெளியான பல தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் படு சகஜமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த அவர், புதுச்சேரியிலிருந்துதான் இந்தியா முழுவதும் திருட்டு விசிடிக்கள் போகின்றன.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியை விரைவில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன் என்றார் தங்கர்.