முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திய தவக்களை: வீடியோ இதோ
சென்னை: முந்தானை முடிச்சு படம் மூலம் பிரபலமான நடிகர் தவக்களை இன்று மரணம் அடைந்தார்.
பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் நடிகரானவர் தவக்களை. சென்னையில் வசித்து வந்த அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்தில் வரும் சில காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்போம்.
சோறு திருட்டு
வாத்தியார் வீட்டிலேயே சோறு, குழம்பு திருடி சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரும் தவக்களை மற்றும் நண்பர்களை பாக்யராஜ் தண்டிக்காமல் விடுவார். இது தவக்களைக்கு முதல் படமாக இருந்தாலும் அருமையாக நடித்திருப்பார்.
பணம் திருட்டு
கோவில் பூசாரி தட்டில் இருந்து ரூ.25 திருடி உழைக்கும் கரங்கள் படம் பார்த்தார்களாம் தவக்களை மற்றும் அவரது நண்பர்கள். பஞ்சாயத்தில் நின்று கொண்டு தெனாவட்டாக பேசியிருப்பார் தவக்களை.
வாத்தியார்
புதிதாக வந்த வாத்தியார் தான் பாக்யராஜ் என்று தெரியாமல் அவரிடம் ஊர்வசி, தவக்களை மற்றும் 2 சிறுவர்கள் செய்யும் சேட்டை ரசிக்கும்படி இருக்கும்.
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தராமலேயே இருந்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications











