Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்பெஷல்ஸ்
தேவயானியை இயக்கவுள்ளார் பாலு மகேந்திரா. ரொம்ப நாளாக அமைதியாக இருந்து வரும் மகேந்திரா, மீண்டும்தனது கேமராவை களம் இறக்குகிறார்.
கடைசியாக அவர் இயக்கிய ராமன் அப்துல்லா பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு எளிதில்மறந்திருக்க முடியாது. இந்தப் படத்தில் தான் திரையுலகில் தொழிலாளர் பிரச்சனை உருவானது. தொடர்ஸ்டிரைக்குகள், உண்ணாவிரதங்கள் என திரையுலகமே அல்லோகலப்பட்டது.
இப்போது மீண்டும் களம் இறங்குகிறார் பாலு மகேந்திரா. ஆனால் தமிழில் அல்ல. இந்திக்குப் போகிறார்.ஹீரோயினாக தேவயானியை முடிவு செய்துள்ளாராம். ஹோம்லி முகமாக வேண்டும் என்பதால் தேவயானியைஅவர் தேர்ந்தெடுத்துள்ளாராம்.
இசை யார்? இளையராஜாவா மகேந்திரா?
தமிழ் அசோகாவில் ஆஷிஷ்:
டிவி மூலம் பிரபலமாகி இந்தித் திரையுலகில் புகுந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ஒரு இயல்பான நடிகர். இந்தியில் பலபடங்களில் நடித்துள்ள அவர் தமிழிலும் கால் பதித்தார் தில் படம் மூலம்.
முதல் படத்திலேயே ஆக்ரோஷமான வில்லனாக வந்து கலக்கிய ஆஷிஷ் தற்போது இரண்டாவது தமிழ் படத்தில்நடிக்கவுள்ளார்.
அன்பாலயா பிரபாகரன் தயாரிக்கும் அசோகா படத்தில் அசத்தலான வேடமாம் வித்யார்த்திக்கு. "தில்"லில்வித்யார்த்தியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோன பிரபாகரன் உடனடியாக அவரை தனது "அசோகா"விற்கு புக்செய்து விட்டாராம்.
பின்னுங்க ஆஷிஷ் !
ஆஸ்கரின் அடுத்த படம்:
"பூவெல்லாம் உன் வாசம்" நன்றாக போனதால் அந்த உற்சாகத்தில் அடுத்த படத்திற்கான வேலையைத்தொடங்கியுள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ்.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் முதல் படமான "துள்ளாத மனம் துள்ளும்" சூப்பர் டூப்பர் ஹிட் படமானது. அதைஇயக்கிய எழில்தான் "பூவெல்லாம் உன் வாசம்" படத்தையும் இயக்கியுள்ளார். அருமையான கதை, அழகானபாடல்கள், பிரமாண்டமான காட்சியமைப்புகள் என படம் நன்றாக ஓடியது.
எனவே அடுத்த படத்திற்கான வேலையையும் அவர்கள் தொடங்கி விட்டார்கள். தீனா படத்தை இயக்கியமுருகதாஸ் தான் இயக்கிகிறார்.
விஜயகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் மாதவனும் உண்டு. இவர்களுக்கு ஜோடியாக சிம்ரனும்,ஜோதிகாவும் வருகிறார்கள்.
ஓரிலக்க இயக்குநர்...
விஜயகாந்த்தை வைத்து "பரதன்" என்ற படத்தை இயக்கிய சுபாஷுக்கு இப்போது கையில் படங்களே இல்லை.
அவரிடம் இருப்பது "லவ் மேரேஜ்" என்ற ஒரே படம்தான். அந்தப் படத்திற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம்இரண்டு இலக்கத்தைக் கூட தாண்டவில்லையாம். அதாவது ரூ.9 லட்சம்தானாம்.
அடப் பாவமே !