Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக கவிப் பேரரசு வைரமுத்து ஜப்பான்செல்கிறார்.
ஜப்பான் தமிழ்ச் சங்கம் இந்தப் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தலைநகர் டோக்கியோவில்நடைபெறும் இந்த விழாவுக்கு வைரமுத்து தலைமை தாங்குகிறார்.
இதற்காக இன்று இரவு அவர் விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார். வைரமுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்:
வைரமுத்துவின் 50வது பிறந்த நாளையொட்டி சுகுபா நகரில் பாராட்டு விழா நடக்கிறது. ஜப்பான் வாழ் தமிழர்கள்இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பின்னர் 11ம் தேதி மாலை டோக்கியோவில் பொங்கல் விழா நடக்கிறது. சங்கப் பொதுச் செயலாளர் அருள்எழுதியுள்ள "முதல் பார்வை" என்ற கவிதைத் தொகுப்பை வைரமுத்து வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கியோடோ நகரில் தமிழ் பயிலும் ஜப்பானிய மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்வைரமுத்து கலந்து கொள்கிறார். பின்னர் 15ம் தேதி சென்னை திரும்புகிறார்.