Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா!
Recommended Video
சென்னை : நடிகர் விஜயகாந்த் கலைத்துறையில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் மாபெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாபெரும் மாநாடாக இந்த விழா நடத்தப்பட்டது. கலைத்துறை மற்றும் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதையை சிறப்பாக விளக்கும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.
விஜயகாந்த்தின் செல்வாக்கிற்குக் காரணம் அவரது கலைப்பணியா இல்லை வள்ளல்தன்மையா என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பல்வேறு சுவையான சம்பவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், முன்னாள் தலைவர் சரத்குமார், சத்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
விஜயகாந்த் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் லண்டனில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. அங்கிருந்தபடியே அவர் அனுப்பிய வீடியோ விழாவில் திரையிடப்பட்டது. அவருக்கு பிடித்த அப்பா விஜயகாந்தின் கண்களை அவர் கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார்.