ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் இன்று எழுத்தாளர் பாலகுமாரன் சந்தித்தார்.
எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன், தனது இரு மனைவியருடன் இன்று காலை ரஜினிகாந்தின் இல்லம் சென்றார். இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ரஜினிக்கு புத்தகங்கள் பரிசளித்த பாலகுமாரன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்த படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் 'இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினிகாந்தோடு பேசி களித்தேன்' என்ற குறிப்போடு பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











