Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அச்சுறுத்தும் ரியாலிட்டி ஷோக்கள்... டிஆர்பிக்காக ஏன் இந்த கொலை வெறி...
சென்னை: டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டிஆர்பிக்காக நிறைய நாடகத்தனங்கள் அரங்கேறி வருகின்றன. சின்னத்திரை நடிகர்கள் பங்கேற்கும் அச்சம் தவிர், மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடீஸ் நிகழ்ச்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
விளையாட்டு என்பது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும், ஆனால் இப்போது டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் விளையாட்டு நிகழ்ச்சிகள் வினையாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒரு புத்தம் புதிய அதிரடியான விளையாட்டு நிகழ்ச்சி அச்சம் தவிர், கடந்த ஜூன் 02ம் தேதி முதல் வியாழன் - ஞாயிறு இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
அச்சம் தவிர் நிகழ்ச்சியானது சின்னத் திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வெள்ளி திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் கடினமாணதாகவும், ரத்தம் வரக்கூடியதாகவும் இருக்கிறது.
நடிகைகள் பட்டாளம்
பெண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகை சோனியா அகர்வால், நடிகை காயத்ரி ஜெயராமன், நடிகை சஞ்சனா சிங், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் நாயகி- நடிகை காயத்ரி, நடிகை மதுமிலா, பிரியங்கா தேஷ்பாண்டே, ‘மெட்டி ஒலி' காயத்ரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகர்கள் தொகுப்பாளர்கள்
ஆண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் , மா கா பா ஆனந்த், நாடோடிகள் படத்தின் புகழ்- நடிகர் பரணி, சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், அமுதவாணன், சரவணன் மீனாட்சி புகழ் - சித்தார்த் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை புகழ்- அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ரத்தக்களறிதான்
ஒரு மரத்தை ஒருவர் பிடித்துக்கொள்ள அதிலிருந்து விடுவித்து எல்லை கோட்டுக்கு அப்பால் தூக்கி வீசவேண்டும். பாவம் சஞ்சனா சிங் படாத பாடு பட்டுப்போனார். கணேஷ் வெங்கட்ராமன் முகத்தில் காயம் பட்டு ரத்தமே வந்து விட்டது.
மயக்கம் வந்திருச்சேப்பா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடீஸ் நிகழ்ச்சியில் அதை விட கொடூரமான போட்டிகளை வைத்தனர். பெண் போட்டியாளர்கள் வயிற்றில் கயிறை கட்டிக்கொண்டு இழுப்பதுதான் போட்டி. ஆள் ஆளுக்கு இழுக்க வயிறு வலியால் துடிக்க கடைசியில் காயத்ரிக்கு மயக்கமே வந்து விட்டது.
|
திகில் போட்டி
இதையெல்லாம் விட இனி பேய் பங்களாவில் அழகு நாயகிகளை அலர வைத்து அச்சுறுத்துகிறார்கள். சீரியல், சினிமாவில்தான் பேய் கதை என்றால் ரியாலிட்டி ஷோவிலும் கூட பேய் பங்களாவில் போய் படப்பிடிப்பு நடத்தி பார்வையாளர்களை அச்சுறுத்துகின்றனர்.
|
ஈஸியான போட்டி
இதை தனியாக செய்து பார்க்க வேண்டாம் என்று வேறு கீழே போடுகிறார்கள். சின்னத்திரை நட்சத்திரங்களும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் இது போன்ற கொடுமையான போட்டிகளை தவிர்த்து விட்டு ஈஸியான, காமெடியான போட்டிகளை வைக்கலாமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!