Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிவி சீரியலில் மீண்டும் புவனேஸ்வரி..
நடிகை புவனேஸ்வரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மசாலா குடும்பம் என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடரில் நடிகை யாமினி என்ற பெயரில் சினிமா நடிகையாகவே நடிக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மசாலா குடும்பம்'
உமாசங்கருக்கு அழகான மனைவி, அர்ஜூன், அஞ்சலி, அக்ஷயா என மூன்று குழந்தைகள். இதில் மாடி போர்சனுக்கு வரும் வினோத் உமாசங்கரின் மகளை காதலிக்கிறான். இந்த காதலில் ஜெயிக்க அவன் போடும் நாடகம்தான் கதையின் மையக்கரு.
பிரபல நடிகர்கள், நடிகையர்கள் நடிக்கும் இந்த காமெடி தொடருக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது.
நடிகன் ஆசையில்
உமா சங்கர் தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டவர். இதற்காக அவ்வப்போது நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறுவது அவரது வழக்கம்.
இதனால் இவரது மாமியாரான வனசுந்தரி இவரை கொஞ்சம் கூட மதிப்பதில்லை.
சான்ஸ் கிடைத்தது
உமா சங்கர் எதிர்பார்த்தது போலவே திடீரென ஒருநாள் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் நடிகை யாமினிக்கு கணவராக நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார் உமா சங்கர்.
யாமினியின் மனதில்
உமா சங்கரின் நடிப்பு யாமினியை கவரவே, தனியாக சந்தித்து பேசுகிறாள் யாமினி. அதோடு நில்லாமல் உமா சங்கருக்கு ரூ.மூன்று லட்சம் சம்பளம் கொடுத்து தனக்கு ஆலோசகராக நியமிக்கிறாள் யாமினி.
மேனேஜருக்கு சிக்கல்
இதன்பிறகு யாமினி அனைத்திற்கும் உமா சங்கரையே நாட, யாமினியிடம் பணிபுரியும் மேனேஜர் ஏபிசிக்கு பல விதங்களில் இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பல சந்தர்ப்பங்களில் ஏபிசியின் மூக்கை உடைக்கும் உமா சங்கரை எப்படியாவது இங்கிருந்து துரத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கென திட்டமிடுகின்றான் ஏபிசி.அவன்முயற்சி பலித்ததா என்பது அடுத்து வரும் பரபரப்பு காட்சிகள்.
நடிகை புவனேஸ்வரி
யாமினியின் வரவால் உமாசங்கரின் குடும்பத்தில் ஏற்படுத்தப் போகும் சலசலப்புகள் அடுத்தகட்ட விறுவிறுப்பு. நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை புவனேஸ்வரி நடிகை யாமினியாக இந்த தொடரில் நடிக்கிறார்.