Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கலைஞர் டிவிக்கு தாவிய ராதிகா... விரைவில் முடிகிறதா சன் டிவியின் சித்தி 2 சீரியல்?
சென்னை : நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் சன் டிவியின் மிகவும் புகழ்பெற்ற தொடர். இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.
இந்லையில் தற்போது சித்தி 2 தொடரை துவக்கி அதில் நடித்து வந்த ராதிகா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது அவர் கலைஞர் டிவிக்காக பொன்னி C/o ராணி என்ற புதிய தொடரை எடுத்து வருகிறார். இந்தத் தொடர் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
சீரியல்
நடிகை
தற்கொலையில்
திடீர்
திருப்பம்…
காதலன்
கைது
!

சூப்பர்ஹிட் நாயகி
நடிகை ராதிகா, 80களில் மிகவும் சூப்பர்ஹிட் நாயகியாக இருந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நாயகியாக நடிப்பதில் இருந்து விலகிய அவர், சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பினார்.

சிறப்பான சீரியல்கள்
இவரது சித்தி, வாணி ராணி உள்ளிட்ட தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவை. இந்த தொடர்களின் டிஆர்பி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ரசிகர்கள் தினந்தோறும் இந்தத் தொடர்களை கொண்டாடினர். தற்போது போல யூடியூப் வசதிகள் அந்த காலகட்டத்தில் இல்லாததால் தினந்தோறும் டிவி முன்பு அந்த நேரத்தில் ஆஜராகி விடுவார்கள்.

சித்தி தொடர்
அந்த அளவிற்கு வரவேற்பை பெற்றன இந்தத் தொடர்கள். குறிப்பாக சித்தி என்ற தொடர் மிகவும் சிறப்பான வசூலை ராடான் டிவிக்கு பெற்றுத்தந்தது. குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமிக்கு சித்தியாக மாறும் சூழலுக்கு தள்ளப்படும் ராதிகா, தொடர்ந்து தன்னுடைய அந்த சித்தி கேரக்டரை எப்படி நியாயப்படுத்துகிறார் என்பதாக கதையோட்டம் காணப்பட்டது.

சித்தி 2 தொடர்
இந்தத் தொடர் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்தடுத்த தொடர்களை இயக்கிய ராதிகா, கடந்த ஆண்டில் சித்தி 2 தொடரை துவக்கி அதை சிறப்பான கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பி வந்தார். கவின், வெண்பா, சாரதா என சிறப்பான பல கதாபாத்திரங்களுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்றது.

தொடரிலிருந்து விலகிய ராதிகா
ஆனால் இடையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தொடரிலிருந்து ராதிகா விலகினார். அது முதலே இந்த தொடர் தடுமாறியது. ஆனாலும் வெண்பாவாக நடித்த ப்ரீத்தி ஷர்மா மற்றும் கவினாக நடித்த நந்தன் லோகநாதன் உள்ளிட்டவர்களின் நடிப்பால் தொடர் நன்றாக சென்றது. குறிப்பாக கவின் -வெண்பா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நிறைவடைகிறதா சித்தி 2?
கவின் சார் என்று வெண்பா கொஞ்சலாக கூப்பிடுவது அவ்வளவு அழகாக இருக்கும். இந்நிலையில் தற்போது ராதிகா, கலைஞர் டிவிக்காக பொன்னி c/o ராணி என்ற தொடரை தயாரித்து வருகிறார். இந்தத் தொடர் அடுத்த மாதத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் சித்தி 2 விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தத் தொடரை மேலும் நீட்டிக்க வேண்டும் சித்தியாக நடித்த ராதிகா மீண்டும் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கவின் மற்றும் வெண்பாவின் அழகான காதலை மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் கூறிவருகின்றனர்.
-
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
-
விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தாலும்.. தனது முதல் கார் ஜெய்ஷங்கரால்தான் கிடைத்தது..நெகிழும் எஸ்ஏசி
-
வெப் சீரிசில் கால் பதிக்கும் ஏவிஎம்.. சைபர் க்ரைமின் இருண்ட பக்கங்கள்.. “தமிழ் ராக்கர்ஸ்“!