Don't Miss!
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- News
இனிமே குடியரசு தலைவர் மாளிகையிலிருப்பது "முஹல்" தோட்டமில்லை.. "அம்ரித் உத்யான்" அதிரடி மாற்றம்
- Sports
"ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை".. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
புது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு?
சென்னை : தமிழ் புத்தாண்டையொட்டி புது படங்களை ஒளிபரப்பி மக்களை மகிழ்வித்த தொலைக்காட்சிகள்.
Recommended Video
கொரோனா பாதிப்பு வந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்ட நிலையில் அனைத்து துறைகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் பொழுதுபோக்கு துறையான சினிமா துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சீரியல் ஷூட்டிங் ஏதும் நடக்காததால் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பழைய ஹிட் சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

ஒரு சில தொலைக்காட்சிகள் படமாக போட்டு தள்ளுகின்றனர். ஆனால், எவ்வளவு நேரம் தான் டிவி பார்ப்பது, பார்த்த படத்தையே எத்தனை முறை பார்ப்பது என்று மக்களுக்கு பெறுத்துப்போய் இருந்தனர். இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டன்று அனைத்து சேனல்களும் தங்கள் கைவசம் இருந்த புதுப்படங்களை போட்டு அசத்தி உள்ளனர்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் அஜித், ரஜினி, சூர்யா, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் ஹிட் படத்தை போட்டு பொதுமக்களை கவர்ந்தனர்.
விஜய் டிவியில் வெளிவந்து சில மாதங்களே ஆன மெகாஹிட் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒளிபரப்பானதால், இந்த படம் அனைத்து சேனல்களுக்கும் மதியநேரத்தில் ஹெவி காம்படிஷன் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை ஒளிபரப்பான நேர் கொண்ட பார்வை தல ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதே நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தர்பார் திரைப்படம் ரஜினி ரசிகர்களை பெரும் அளவு ஈர்த்தது. ஒரு பக்கம் அல்டிமேட் ஸ்டார் இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் என்று அனைத்து சேனல்களும் சும்மா தெறிக்க விட்டன.
கே டிவியில் தானா சேர்ந்த கூட்டம், ஜெயா டிவியில் சிவகாசி போன்ற பல படங்கள் ஒளிபரப்பாகின. இந்த படங்களை ரசிகர்கள் பல முறை வெள்ளித்திரையில் பார்த்திருந்தாலும் இந்த ஊரடங்கு நேரத்தில் இந்த மாதிரியான ஹிட் படங்களை ஒளிபரப்பும் போது அதற்கு தனி மவுசு தான்.

மக்களுக்கு ஒரு பெரிய கவலை என்ன வென்றால், அனைத்து சேனல்களிலும் ஒரே நேரத்தில் ஹிட் படங்களை போட்டுவிட்டதால், ரசிகர்கள் எதை பார்ப்பது என்று குழம்பினர். ஆனால் அனைத்து தொலைக்காட்சி நிறுவனமும் டி.ஆர். பியை அள்ளியது என்பது நிதர்சனமான உண்மை.
அப்பாடா ஒரு வழியா ஊரடங்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எல்லாருக்கும் பழைய சீரியல்களில் இருந்தும், போட்டு போட்டு போர் அடித்த படங்களில் இருந்து விடுதலை என்று நினைத்து பெரும் மூச்சு விட்டு முடிக்கும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிப்பு செய்தி, மனதை மீண்டும் வெறுப்பாக்கி உள்ளது. சிலருக்கு இந்த காலகட்டம் மிக சந்தோஷம் சிலருக்கு வருத்தம் .

அனைத்து படங்களும் அவரவர் ரசிகர்களால் பெரும் அளவுக்கு பார்த்து ரசிக்கப்பட்டதினால். எந்த சேனல்ளுக்கு அதிக டி. ஆர். பி வரப்போகுதோ என்று அந்தந்த டிவி நிறுவத்தினர் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.