Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புது காரு.. புது பங்களா... கலக்கறீங்க நடிகைகளே.. ஆனால் ரியாலிட்டி வேற மக்களே!
சென்னை: தொலைக்காட்சி சானல்களின் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு குடும்ப பெண்கள் ஃ பேனாக மாறி இருக்கிறார்கள். கதைக்காக மட்டும் இல்லை.. நடிகைகளின் புடவை, நகைகள் என்று பார்க்கவும் இவர்கள் சீரியல் பார்த்து வருகிறார்கள்.
தொலைக்காட்சியின் பல சீரியல்களில் நடிகைகள் நடித்து வந்தால், அவங்களுக்கென்ன.. நடிச்சு, பணம், புகழ், புது வீடு, புது கார்னு கலக்கறாங்க. நடிச்சால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூட சீரியல் ஆர்வலர்களுக்கு எண்ணம் உண்டு.
சினிமா நடிகைகளை இவர்கள் இந்த கோணத்தில் வைத்து பார்ப்பதில்லை. அவர்கள் இவர்கள் கணக்குக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைவு ஒரு புறம் இருந்தாலும், அவர்களை பற்றி இவர்கள் எந்த விதத்திலும் நினைத்துப் பார்ப்பதில்லை.
கேள்வி கேட்பாங்க
ஒரு சீரியலில் ஒரு எபிசோடில் கட்டிய புடவையை வேறு ஒரு எபிசோடில் உடுத்தினால், அந்த நடிகையை எங்காவது பார்க்க நேர்ந்தால் மறக்காமல் இந்த கேள்வியை கேட்டுவிடுவார்கள். என்னா ஒரே புடவையை அடிக்கடி கட்டறீங்களே என்று. அதோடு, காதில் எப்போதும் இதே ஜிமிக்கித்தானா? வேற மாத்துங்க.. நல்லாவே இல்லை என்றும் ஆலோசனை தருகிறார்கள்.
நடிகைகள் கஷ்டம்
சீரியல் நடிகைகளுக்கு இதனால் பல கஷ்டம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அதாவது ரெண்டு சானல்களில் ரெண்டு சீரியலில் நடித்தால், ஒரு சானல் சீரியலுக்கு கட்டிய புடவையை இன்னொரு சானல் சீரியலுக்கு உடுத்த முடியாது. அந்த சானல் சீரியலுக்கு ஒரு செட் புடவை, ஃபேன்சி நகைகள், தலை முடி ஸ்டைல் என்று வைத்துக்கொண்டு, இன்னொரு சானல் சீரியலுக்கு இதே மாதிரி வேற செட் வச்சுக்கிட்டு என்று நாங்கள் நடிக்க வேண்டும்.
பாதி சமபளம்
நடிக்க வாங்கும் சம்பளத்தில் பாதி இப்படியான செலவுக்கே போய்விடும். இதெல்லாம் எங்களுக்கு கஷ்டம்தான். இதை எல்லாம் செய்தால்தான் மார்க்கெட்டில் நாங்கள் நிலைத்து நிற்க முடியும். சீரியல்களில் நடிக்கும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சம்பளம், வேலை வாய்ப்பு என்றும் இருக்காது. அவங்கவங்க நிலைக்குத் தகுந்த மாதிரிதான் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் ஒரு நாள் சமபளம் இருக்கும்.
நித்தம் நித்தம் இல்லை
அதே போல நித்தம் நித்தம் என்று ஷூட்டிங் இருந்தாலும் நடிகைகளுக்கு சீன் வரும்போதுதான் அவர்களுக்கான நிறைய நாள் வேலை வாய்ப்பு இருக்கும். இதனால் மாசத்தில் எப்படியும் 10 நாட்களுக்கு மேல் வேலை இல்லாமலும் இருக்கலாம். அதனால் சீரியல் நடிகைகள் பெரும் அளவில் சம்பாதிப்பார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்று நடிகைகள் தரப்பில் கூறப்படுகிறது.