‘அத்திப்பூக்கள்’ வில்லி ‘மகா’, நிஜத்தில் மகா அமைதியாம்!

வில்லியை விட வில்லிக்கு தூபம் போடும் சைடு கதாபாத்திரங்களும் பிரபலமாக பேசப்படுவதுண்டு அந்த வகையில் அஞ்சலிக்கு அடுத்த வில்லியாக உள்ள 'மகா' கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. சதிகாரர்களை விட சதிக்கு துணை புரியும் 'மகா' ( இனியா) வைத்தான் இன்றைக்கு நாம் சந்திக்கப் போகிறோம்.
சீரியலில் ஒரு வில்லியை சமாளிப்பதே பெரிய விசயம் அதுவும் இரண்டு வில்லிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அழுகையும், ஆர்பட்டமும்தான். சீரியலில் வில்லியாக நடித்தாலும் நிஜத்தில் அனைவருமே நண்பர்கள்தான் என்கிறார் இனியா.
நடிகை சச்சுவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் இந்த இனியா. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதானாம். பிரியா விஷனில் கல்யாண கலாட்டா சீரியலை வேடிக்கை பார்க்க போன போது திடீரென்று இவரும் நடிகையாகிவிட்டார். அது முதல் அத்திப்பூக்கள் வரை தொடர்கிறது சீரியல் பயணம்.
அத்திப்பூக்களில் வில்லி என்றாலும் 'உறவுக்கு கை கொடுப்போம்' சீரியலில் மென்மையான அமைதியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் கேரக்டரே அதுதான் என்கிறார் இனியா.
அதனால இந்தத் தொடரில் நடிக்கிறேன் என்று சொல்வதைவிட வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.
இனியாவின் கணவர் மாறன் பிஸினஸ்மேன். அவருடைய ஆதரவும், மாமியாரின் ஆதரவும் எப்போதும் உண்டாம் இனியாவிற்கு.
வாழ்த்துக்கள் இனியா, நல்லா வில்லத்தனம் பண்ணுங்க !


Click it and Unblock the Notifications











