Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பெப்பர்ஸ் டிவியில் கிராம நடனம் பார்க்க “நம்மூர் ஆட்டம்” பாருங்க
சென்னை: திறமைகளை வைத்துக்கொண்டும் கனவுகளை சுமந்து கொண்டும் வாழ்க்கை நடத்தும் கிராமத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் புத்தம் புது நடன நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியின் நம்மூர் ஆட்டம்.
தமிழ்த்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள நடனம் தெரிந்தவர்களை, நடன கலைஞர்களாக உலகத்துக்கு வெளிச்சம் காட்டும் விதமாக நம்மூர் ஆட்டம் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா நடன இயக்குனர் ரவி தேவ் நடுவராக அவரது குழுக்களுடன் தமிழ்நாட்டு கிராமங்களுக்கு சென்று வயது வித்தியாசமின்றி நடனத்தில் விருப்பமுள்ளவர்களை ஆடச்சொல்கின்றனர்.
இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்டவர்களிடையே போட்டி நடத்தி நம்மூர் ஆட்டத்தில் யார் நம்பர் ஒன் என்பதை உலகுக்கு தெரிவிக்க இருக்கும் நிகழ்ச்சியே நம்மூர் ஆட்டம்.
நடன நிகழ்ச்சி
சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் ஆகிய நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.
கிராமத்து மக்களுக்கு நடனம்
டிவி ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் கிராமத்து மக்களும் பங்கேற்கும் வகையில் நம்ம ஊர் ஆட்டம் என்ற நடன நிகழ்ச்சியை பெப்பர்ஸ் டிவி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி குன்றத்தூரில் தொடங்கியது.
கிராமத்து கலைஞர்கள்
கிராமத்தில் உள்ள பல கலைஞர்களின் நடனத் திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டது. ரியா, சவால்ராம் ஆகியோர் இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
சினிமாவில் நடனம்
நடன இயக்குநர் ரவிதேவ் நடுவராக இருந்து திறமையான நடன கலைஞர்களை தேர்வு செய்கிறார். இறுதிப் போட்டியில் 5 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது.