Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மீண்டும் சினிமாவில் ஹீரோயின் ஆன தேவயானி
சினிமாவில் தேவயானிக்கு என தனி முத்திரை இருந்தது. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது சீரியல்தான். என்னுடைய முதல் சீரியல் "கோலங்கள்' பெரிய ஹிட். நான்கு ஆண்டுகளுக்கு மேல் அந்த சீரியல் ஓடாதே வீடே இல்லை. அதைப் பார்க்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அது ரீச் கொடுத்தது.
இப்போது "முத்தாரம்' சீரியலில் பரபரக்கும் போலீஸ் வேடம். என்னால் இப்படி நடிக்க முடியுமா என்று எனக்கே ஆச்சரியம். "காக்க காக்க' சூர்யா, "சாமி' விக்ரம் போல் "முத்தாரம்' ரஞ்சனி தேவி கேரக்டரும் டி.வி. ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்த இடம், அது தந்த உயரம் எல்லாமே ஆச்சரியம்தான். சீரியல் எனக்கு கிடைத்த வரம். அதை தந்த கடவுளுக்கு நன்றி.
சினிமாவை விட சீரியல்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. முழுமையான ஒரு நடிகையாக என்னை நானே உணர்ந்தது இங்கேதான். எனக்கு சீரியல்களை தவிர்த்து எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை. அந்த சமயத்தில்தான் என் கணவர் ராஜகுமரான் ஒரு கதை சொன்னார். நல்ல கதை நாமே தயாரிக்கலாம் நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று சொன்னேன். புதுமுகம் தேடும் போது சிக்கல் எழுந்ததால் நானே நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் எதார்த்த கதைகளும், எதார்த்த முகங்களும்தான் இப்போது ஜெயிக்கின்றன. அதனால் எங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழ் சினிமாவில் முன்பு எனக்கு ஜோதிகாவை பிடித்திருந்தது. சமீபத்தில் தமன்னா பிடிக்கும். அவ்வளவுதான். வேறு சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. இப்போது எனக்கு சினிமா பார்க்க நேரம் கிடைப்பதில்லை. இப்பொழுது சீரியலுக்கே நேரம் சரியாக இருக்கிறது. மீதம் இருக்கும் நேரங்களை குழந்தைகளோடு செலவிடுகிறேன் என்று கூறிவிட்டு குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடப்போனார் தேவயானி.