Don't Miss!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் ?
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான தொடர்களில் ஒன்று பாக்யலட்சுமி. இதில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் தற்போது வந்து விட்டது. ப்ரோமாவை பார்த்து விட்டு, இந்த காட்சி எப்போது ஒளிபரப்பாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் கணவராக வரும் கோபி, மனைவிக்கு தெரியாமல் அவரது தோழியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரையும் ஏமாற்றி வாழ்ந்து வரும் கோபி, தனது இரண்டாவது மகன் எழிலிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் காட்சியை காட்டி ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு!
டிஆர்பி.,யை எகிற வைத்த ப்ரோமோ
இந்த ஒரே ஒரு ப்ரோமாவால் பாக்யலட்சுமி சீரியலின் டிஆர்பி மளமளவென உயர்ந்து விட்டது. தோழி ராதிகாவை ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்று, ஆறுதல் கூறுவதைப் போல், தோளில் சாய்த்து கட்டி அணைத்துக் கொள்கிறார் கோபி. அதே ரெஸ்டாரன்டிற்கு ஃபிரண்டை பார்க்க வரும் எழில் அதனை பார்த்து விட்டு, கோபியிடம் கோபப்படுகிறான்.
சர்ப்ரைஸ் தரும் கோபி
மகனிடம் மாட்டிக் கொள்ளும் கோபி, அதை வீட்டில் தெரியாமல் சமாளிக்க, எழிலுக்கு முன்பே வீட்டிற்கு சென்று, பாக்யலட்சுமி வாங்க நினைத்து முடியாமல் போன டூவீலரை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் தருகிறார்.
பாக்யாவிற்கு ஐஸ்
அதோடு நிற்காமல், பாக்யாவை பைக் ஓட்டச் சொல்லி பின்னால் அமர்ந்து போகிறார். பாக்யாவிற்கு டூவீலர் வாங்கிக் கொடுக்க எழில் முயற்சிப்பதை வைத்தே, பாக்யாவிற்கு ஐஸ் வைத்து தப்பிக்க நினைக்கிறார் கோபி. அம்மாவும், அப்பாவும் டூவீலரில் ஒன்றாக வருவதை மாடியில் இருந்து எழில் பார்ப்பது போல் ப்ரோமோ காட்டப்படுகிறது.
எழில் என்ன செய்வார்
கோபி மாட்டிக் கொண்டார். எழில், பாக்யாவிடம் அப்பா பற்றிய உண்மைகளை சொல்லப் போகிறார் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அடுத்து இதுதான் நடக்க போகிறதா
ஆனால் வழக்கம் போல் ட்விஸ்ட் என்ற பெயரில் இப்படி பரபரப்பை கிளப்பி விட்டு, புஷ் ஆக்கத் தான் போகிறார்கள். அதாவது, ரெஸ்டாரன்ட்டில் கோபி மீண்டும் ஒரு பெண்ணுடன் இருப்பதைத் தான் எழில் பார்க்கிறார். இந்த முறையும் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க மாட்டார். அதற்குள் எழிலை கோபி பார்த்து விட, ராதிகாவை மறைத்து அனுப்பி வைக்கிறார்.
இதற்கா இவ்வளவு பில்ட்அப்
அதே போல் வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை சொல்ல நினைத்து வரும் எழிலிடம், அப்பா கோபி டூவீலர் வாங்கிக் கொடுத்ததை சொல்லி சந்தோஷப்படுகிறாள் பாக்யா. அம்மாவின் சந்தோஷத்தை பார்க்கும் எழில், அதை கெடுக்க வேண்டாம் என எண்ணி, அமைதியாக இருந்து விடுகிறார். ஆக மொத்தத்தில் இந்த முறையும் கோபி தப்பித்து விடுகிறார். இதற்கு தான் இந்த பில்ட்அப்.
-
Rajinikanth - தீவிர கஷ்டம்.. சொத்துக்களை விற்க முடிவெடுத்த குருநாதர்.. ரஜினி செய்த செம உதவி
-
Nayanthara - 50 செகண்ட்ஸ்க்கு 50 கோடி ரூபாயா?.. நயன்தாராவை பார்த்து வாய் பிளக்கும் திரைத்துறை
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை