Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bigg Boss 3 'க.பா.'வை வெளியேற்றச் சொன்னால் 'பா. பா.'வை வெளியேற்றிய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்த பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டுவிட்டாராம்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சாக்ஷி அல்லது கவின் அல்லது அவர்கள் இருவரையும் சேர்த்தே வெளியே அனுப்பி வைக்குமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் பாத்திமா பாபுவை தான் வெளியேற்றியுள்ளார் பிக் பாஸ்.
பாத்திமா பாபு
பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு ஏற்கனவே வெளியேறி தன் சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் போட்டியாளராக பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்தவர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார். கவின்(கடலை பார்ட்டி(க. பா.) அல்லது சாக்ஷி வெளியேற்றப்பட்டிருந்தால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் வெளியேறினால் காதல் கதை பாதியில் முடிந்துவிடும் என்பதால் பிக் பாஸ் தற்போதைக்கு அவர்களை வெளியேற்ற மாட்டார். மேலும் வனிதா விஜயகுமார் இருந்தால் தான் தினமும் சண்டையும், சச்சரவும் ஏற்பட்டு பிக் பாஸ் வீடு பரபரக்கும் என்பதால் அவரும் கடைசி வரை இருப்பார்.
பாசம்
பாத்திமா பாபுவை பிக் பாஸ் போட்டியாளர்கள் அம்மா என்று பாசமாக அழைத்தனர். பார்வையாளர்களுக்கும் பாத்திமா பாபு நடந்து கொண்ட விதம் பிடித்திருந்தது. மீரா மிதுனை பார்த்து அவர் பெண் கடவுள் போன்று என்று பாத்திமா பாபு தெரிவித்தது மட்டும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிகமாக கடுப்பானது வனிதா விஜயகுமார் தான்.
டாஸ்க்
பாத்திமா பாபுவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தும் அவரை வெளியேற்றியுள்ளனர். வயதில் மூத்தவர் அவரால் டாஸ்குகளை ஓடியாடி செய்ய முடியாது என்பதால் முதல் ஆளாக வெளியேற்றியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அடுத்து மோகன் வைத்யா அல்லது சித்தப்பு சரவணன் தான் வெளியேற்றப்படுவார்கள்.
|
ட்விட்டர்
பாத்திமா பாபு சீனியர் என்றாலும் ட்விட்டரில் அவருக்கும் ஆர்மி துவங்கினார்கள் ரசிகர்கள். அவரின் குடும்ப புகைப்படங்கள், இளமை கால புகைப்படங்களை தொடர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு பாத்திமா அம்மாவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று அவரின் ஆர்மிக்காரர்கள் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.