Don't Miss!
- News திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு பெரிய சிக்கல்.. வேகமாக பரவும் பழைய வீடியோ
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
என்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை!
சென்னை: சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் BCCC எனப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையத்தின் கண்டனத்தையும் அபராதத்தையும் பெற்றுள்ளது.
பல மோசமான மற்றும் ஆபாசமான உரையாடல்களை உள்ளடக்கிய கற்பழிப்பு காட்சியை சித்தரித்ததற்காக பார்வையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து பி.சி.சி.சி கவுன்சில் ரூ .2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மே மாதத்தில் ஒளிபரப்பப்பட்ட மூன்று அத்தியாயங்களில் கற்பழிப்பு காட்சிகள் இருந்தன, அந்த நிகழ்ச்சியின் வில்லி ரோஜா தனது அக்காவை கற்பழிக்க ஒரு சில அடியாட்களை ஏற்பாடு செய்கிறார். அவர்களிடம் கட்டளை பிறப்பித்து மற்ற ஆட்களையும் பின்பற்றும்படி வலியுறுத்துகிறார்.
கண்டனத்திற்குரிய வசனம் பின்வருமாறு, "கவனமாக கேளுங்கள் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் போகும் பெண் திருமணமாகாதவர், கன்னிப்பெண். நீங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, உங்கள் இதயத்தில் இரக்கமோ பரிதாபமோ இருக்கக்கூடாது. எங்களுக்கு பணம் கொடுத்த ரோஜா மேடத்தின் சகோதரிக்கு நாங்கள் இதைச் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பரிதாபம் இருக்கக்கூடாது. அவள் எவ்வளவு கூக்குரலிட்டாலும், பரிதாபமோ, தயவோ, கருணையோ இருக்கக்கூடாது. உனக்கு புரிகிறதா?" என கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் அந்த நபர், "நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் கேட்டேன் என்று கூறிவிட்டு மனதில் ,அது உங்கள் சகோதரிக்கு என்று நீங்கள் நினைத்தீர்களா? நீங்கள் விவரித்ததெல்லாம் உங்களுக்கு நடக்கும்" என்று மனதிற்குள் நினைக்கிறார்.
பார்வையாளர்களின் பல புகார்களை அடிப்படையாகக் கொண்டு பி.சி.சி.சி ஒரு கண்டன அறிவிப்பை அனுப்பிய பின்னர், சேனல் தரப்பிலிருந்து, இந்த நிகழ்ச்சி "கற்பனையான குடும்பம் சார்ந்த சீரியல், இது தார்மீக மதிப்புகள் மற்றும் குடும்பம் மற்றும் பெண்களின் நல்ல நெறிமுறைகளை வலியுறுத்துகிறது" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் வேளையி்ல், குடும்ப நெறிகளை வலியுறுத்துகிறோம் என்ற பெயரில், பழி வாங்குதல், வன்மம் நிறைந்த காட்சிகள், முறையற்ற வசனங்களை வைப்பதை எந்த வகையில் சேர்ப்பது என தெரியவில்லை. இது போன்ற பழிவாங்குதல் எப்போது குடும்ப நெறியில் சேர்ந்தது எனவும் தெரியவில்லை. எதார்த்தமான இயக்குநர் என பெயர் எடுத்த திருமுருகனையும் இந்த டிஆர்பி விட்டு வைக்கவில்லை. டிஆர்பி காக சீரியல் எடுக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை கூறலாமே!
-
Rajinikanth - தீவிர கஷ்டம்.. சொத்துக்களை விற்க முடிவெடுத்த குருநாதர்.. ரஜினி செய்த செம உதவி
-
Baakiyalakshmi serial: ஓஹோ என்று மாறிய கோபியின் பிசினஸ்.. வாயெல்லாம் பல்லாகிப் போன ஈஸ்வரி!
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை