Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கடவுளோட கதை தெரியுமா?
ஹாரி... ஹரி... ஹரி... யார் உன் ஹரி? அவன் எப்படி இருப்பான்? எங்கு இருப்பான்? என்ற தந்தை இரண்யகசிபுவின் நக்கலான கேள்விக்கு என் ஹரி எங்கும் இருப்பார். இந்த தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பதில் தருவார் மகன் பிரகலாதன். உடனே கோபத்தோடு தூணை அடிக்க, நரசிம்ம ரூபாமாய் வந்து இரண்யனை வதம் செய்வார் மகாவிஷ்ணு. இதுதான் நம் ஊர் டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் பார்க்கும் கடவுளின் அவதார கதையாக உள்ளது.
கடவுளை கிருஷ்ணராகவும், ராமனாகவும், சிவனாகவும் பார்த்து வருகிறார்கள் இந்துக்கள்.இயேசுவாக கிருஸ்துவர்களும், அல்லாவாக முஸ்லீம்களும் வணங்கி வருகின்றனர். புத்தமதமும், சமணமதமும் இந்தியாவில் தோன்றி இங்கே இல்லாத அளவிற்கு மறைந்து வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று ஒரு குழுவும், கடவுள் இல்லை என்று ஒரு குழுவும் இங்கு இருக்கின்றனர். எது எப்படியோ கடவுளின் கதையைச் சொல்லப்போகின்றனர் நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ‘கடவுளின் கதை'யை சொல்லப்போகின்றனர்.
ஹாலிவுட் படங்களில் கடவுளாகவும், நெல்சன் மண்டேலா சுயசரிசை படத்தில் நடத்த மார்கன் ப்ரீமேன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 78 வயதாகும் இவர், மதம் பற்றியும், கடவுள் பற்றியுத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
சொர்க்கத்தின் தலைவர் கடவுள், என்றால் நரகத்தின் தலைவர் யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா? உலகில் மதங்கள் எப்படி தோன்றியது. சில மதங்கள் உலகம் முழுவதும் பற்றி பரவுகின்றன. சில மதங்கள் தோன்றிய வேகத்தில் சில ஆண்டுகளில் மறைந்து விடுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு உலகம் முழுவதும் பயணிக்க இருக்கிறார் மார்கன் ப்ரீமேன்.
இந்தியாவில் போதிமரம், அயோத்தி, மாயன் கோவில், கைலாஷ், காசி, ஜெருசலேம், மெக்கா, எகிப்து, பிரமீடு, ஆகிய இடங்களுக்கு கடவுளைத் தேடி செல்கிறார். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆகியோரும் அவருடன் செல்கிறார்கள். அங்கு சென்று தான் பார்த்தவற்றை, சேகரித்த தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு மனிதனுக்குள் கடவுள் எந்த அளவிற்கு ஆட்சி செய்கிறார் என்பதை மார்கன் ப்ரீமேனை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்யவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 171 நாடுகளில் 45 மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் தமிழ் மொழியும் ஒன்று நிகழ்ச்சிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.