'நாகினி' மவுனி ராய் ரசிகரா?: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க
மும்பை: நாகினி தொலைக்காட்சி தொடரின் மூன்றாவது சீசனில் மவுனி ராய் இல்லையாம்.
இந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் தமிழகத்தில் சக்கை போடு போடும் சீரியல் நாகினி. பாம்பு தொடரான இதில் மவுனி ராய் நாகினியாக நடித்து வருகிறார்.
மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நாகினி
நாகினி தொடரின் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் மவுனி ராய் தான் பாம்பாக வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது.

ஏக்தா கபூர்
நாகினி தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மூன்றாவது சீசனையும் துவங்குகிறார். மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் ஒளிபரப்பாகும்.

மவுனி ராய்
3வது சீசனில் மவுனி ராய் கிடையாதாம். அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஏக்தா கபூர். புதுமுகத்திற்கான தேடல் ஏற்கனவே துவங்கிவிட்டதாம்.

ரசிகர்கள்
நாகினி 3ல் மவுனி ராய் நடிக்க மாட்டார் என்ற செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மவுனி ராய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்ததே இந்த சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











