Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
Nayagi Serial: நாயகி... என்னமோ ஆரம்பிச்சு எப்படியோ கதை போகுது...!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் கதையை என்னமோ ஆரம்பிச்சு... எப்படியோ கொண்டு போறாய்ங்க. என்ன சொல்லியும் அனன்யாவைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு இளிச்ச வாயன் இருக்கானேன்னு காண்பிச்சாங்க.
ஒரு மாசத்துக்கு இப்படியே கொண்டு போன கதையில் திடீர்னு டிவிஸ்ட் வச்சு கொண்டு போறாங்க. அனன்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டிவோர்சாம்.. பிஸினஸும் டவுனாம்.
அனன்யா சொத்தோட அவளை கல்யாணம் செய்துகிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கே மறுபடியும் அனன்யாவின் சொத்துக்களை வச்சு. பிசினெஸ் செய்வானாம். ஆரம்பிக்கும்போது ஒரு கதை... டிவிஸ்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதைன்னு சீரியல் எடுப்பவர்கள் கைத்தேர்ந்து விட்டார்கள்.
நாயகி ரேட்டிங்
நாயகி சீரியலை ஆரம்பிச்சதில் இருந்தே அது சன் டிவியின் அனைத்து சீரியல்களை விட ரேட்டிங்கில் முதலிடத்தில் மட்டுமே இருக்கு. நாயகி பார்த்துட்டு சாப்பிடலாம்.. நாயகி பார்த்துகிட்டே சாப்பிடலாம். நாயகி முடியட்டும் சாப்பிடலாம் என்று மக்கள் மூன்று மன நிலைகளில் இந்த சீரியல்களை பார்த்து ஹிட்டாக்கி உள்ளனர். என்றாலும், சீரியல் கதை எத்தனை மட்டமாக இருக்கணுமோ அந்த அளவுக்கும் லெவல் இறங்கித்தான் போகுது.
ஆனந்தி மனசில்
நாயகி சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. சீரியல் ஆரம்பித்த புதிதில், வேறு வில்லத்தனங்கள் மட்டுமே ஆனந்திக்கு எதிராக நடக்கும் சதியாக இருந்தது. ஆனந்தி திருவின் கல்யாணம் எப்போது முடியும் என்று மக்கள் எதிர்பார்த்து நாயகியைப் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
ஆனந்தி அனன்யா
திரு ஆனந்திக்கா, அனன்யாவுக்கா என்று கதையும் போட்டியில் நகர, மக்களும் ஆனந்திக்கு திருவுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நாயகி சீரியலை பார்த்து வந்தனர். இப்போது கலி வரதன், துரையரசன் வில்லத்தனம் எடுபடாமல் போரடிக்க, அனன்யா வில்லத்தனம் என்று ஒரு பெண் செய்யக் கூடாத, செய்யத் துணியாத பல தவறுகளை செய்வதை வைத்து சீரியல் கதையை நகர்த்தி வருகிறார்கள்.
சற்குணம் குடும்பம்
நாயகி சீரியலில் சற்குணமாக அம்பிகா குடும்பத்தின் கதை மட்டும்தான் நார்மலான குடும்பக் கதை போல நகர்ந்து வருகிறது. சீரியலுக்கு கொஞ்சமாவது ரிலாக்ஸ் தருகிறது என்றால், அது சற்குணம் குடும்பத்தை காண்பிக்கும் போதுதான் கிடைக்கிறது. சற்குணம் குடும்பம், கண்மணியின் குடும்பம் என்று இவர்கள் குடும்ப கதை ஓகே.
மற்றபடி கதை என்னமோ ஆரம்பிச்சு.. எங்கியோ என்று பயணித்துக்கொண்டுதான் இருக்கு!