Don't Miss!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க… நீயா நானாவில் நிபுணர்களின் அறிவுரை
இதில் எந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயது என்பது பற்றி ஞாயிறு இரவு நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது. இளம் வயது திருமணமே சரியானது என்றும், குடும்ப சுமைகளை நீக்கிய பின்னர் 28 வயதுக்கு மேல் திருமணம் செய்வதுதான் நல்லது என்றும் இரு தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இடையே சண்டையே ஏற்படாது என்றும் அவ்வாறு சண்டை வந்தாலும் எளிதில் சமாதானமாகிவிடுவார்கள் என்றும் இளவயது திருமணத்தை ஆதரிப்பவர்கள் தெரிவித்தனர்.
அதே சமயம் 28 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்களுக்குத்தான் ஒரு முதிர்ச்சி இருக்கும் என்றும் அவர்கள்தான் குடும்பத்தை திறமையாக நடத்துவார்கள் என்றும் இள வயது திருமணத்தை எதிர்ப்பவர்கள் பேசினார்கள்.
திருமணம் செய்து கொள்வதற்கு எந்த வயது ஏற்றது என்பது பற்றி விளக்கம் அளிக்க இந்த நிகழ்ச்சியில் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் நாகராஜன், பிரபல வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் நாகராஜன், சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு ஏற்றது என்றார்.
பெண்ணோ, ஆணோ வயதான பின்னர் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். தவிர பெண்களுக்கு குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும் என்றார்.
தவிர எந்த வயதில் முதிர்ச்சி வரும் என்று சொல்ல முடியாது. 21 வயதில் முதிர்ச்சியடைந்த நபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் 40 வயதைக் கடந்தும் முதிர்ச்சிடையாதவர்கள் இருக்கின்றனர் என்றார் மருத்துவர்.
இன்றைக்கு இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றனர். அது அவசியமில்லை, குழந்தைகளை பெற்றுக்கொண்டு அதன்பின்னர் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இன்றைய சூழலில் குழந்தை பிறப்பு என்பது வரம்போலதான் கிடைக்கிறது. ஏனெனில் உணவும், மாசடைந்த சூழலும் கூட குழந்தை பிறப்பை தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன. எனவே ஆணாக இருந்தால் 24 வயதில் இருந்து 28 வயதிற்குள்ளும், பெண்ணாக இருந்தால் 22 முதல் 24 வயதிற்குள்ளும் திருமணம் செய்து கொள்வது ஏற்ற பருவம் என்றார்.
காலம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள்தான் அதிகம் சண்டை போட்டு விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறினார் நிபுணர். இதேபோன்று இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்தான் அதிகம் இணக்கமாக இருப்பதாக கூறினார் வழக்கறிஞர் கனிமொழி மதி. இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகாரத்து என்று வரும் போது அவர்களை எளிதாக கவுன்சிலிங் செய்துவிடலாம் என்றும் கூறினார் அவர்.
குடும்ப சூழ்நிலை, பொறுப்பு என்று திருமணத்தை ஒத்திப்போடாமல் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது நல்லது என்றும் கூறினார் கனிமொழி மதி. மனித வாழ்க்கையில் திருமணமும், குழந்தை பிறப்பும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்று. எது சரியான பருவம் என்பதே கூட சில குழப்பம் உள்ளது. நீயா நானாவில் பேசப்பட்ட கருத்துக்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு தெளிவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
நிபுணர்களின் கருத்து சரிதான் அதேசமயம் வரதட்சணை பிரச்சினையால் முதிர்கன்னிகள் ஆகி திருமணம் செய்து கொள்ளும் பெண்களும், அக்கா, தங்கைகள், குடும்ப சூழ்நிலையால் 30 வயதுவரை குடும்பத்திற்கு உழைக்கும் ஆண்களும் இருக்கத்தானே செய்கின்றனர். அவர்கள் லேட்டாகத்தானே திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது மிஸ்டர் கோபிநாத்.