twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கள் காதலில் திரில்லும் இல்லை, திருப்பமும் இல்லை... லதாராவ்

    By Mayura Akilan
    |

    Latha Rao
    மெட்டி ஒலி தொடரில் தொடங்கிய லதா ராவின் சின்னத்திரை பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கணவர் ராஜ்கமலுடனான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என சீரியலை விட்டு சற்று விலகி இருந்தாலும், சமையல் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ என மீடியாவின் கவனத்திலேயே இருக்கிறார். பிஸியான வாழ்க்கைக்கு இடையே தன்னுடைய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் லதா ராவ்.

    நடிகையாக வரவேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. பெங்களூரில் பிறந்தாலும் வளர்ந்ததெல்லாம் சத்தியமங்கலம் பக்கத்தில் பவானி சாகர் என்ற ஒரு சின்ன கிராமத்தில்தான். ஒரு விசேஷத்துக்காக சென்னைக்கு வந்தபோது, அங்கே பக்கத்தில் மெட்டி ஒலி தொடரின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதை பார்க்கப் போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்தத் தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தேன். அப்படித்தான் சின்னத்திரைக்குள் நுழைந்தேன்.

    மெட்டி ஒலியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறேன். அப்பா என்ற சீரியலில்தான் கணவர் ராஜ்கமலை முதன் முதலில் சந்தித்தேன். அப்பொழுது ஒரு ஹாய் கூட சொல்லிக்கொண்டதில்லை. பின்னர் பாலசந்தர் சாரின் ரெக்கை கட்டிய மனசு தொடரில் ராஜ்கமல் ஹீரோவாக நடித்தார் அதில் எனக்கு வில்லி கதாபாத்திரம். சீரியலில் தொடங்கிய காதல் நிஜத்தில் முடிந்தது. வீட்டில் சொன்னவுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிந்து விட்டது. எங்களின் காதலில் எந்த திரில்லோ, திருப்பமோ இல்லை என்பதுதான் உண்மை.

    எங்களுடையது கண்டிப்பான கூட்டுக்குடும்பம். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள். பெரிய பெண் எல்.கே.ஜி படிக்கிறாள். இரண்டாவது குழந்தை பிறந்து 8 மாதம்தான் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கை, குழந்தைகள் என நடிப்பிற்கு சில காலங்கள் இடைவெளி விட்டாலும் மீடியாவின் கவனத்திலேயே இருப்பேன். கணவரின் ஈவன்ட் மேனெஜ்மென்ட் தொழிலுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன்.

    சன் தொலைக்காட்சியின் திருமதி செல்வம் தொடரில் நந்தினி கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது. சூழ்நிலை காரணமாக திடீரென அந்த தொடரில் இருந்து விலக நேரிட்டது. சீரியல்களில் நெகடிவாக நடிப்பதை விட பாஸிட்டிவ் ஆக நடிப்பதையே விரும்புகிறேன்.

    என் கணவர் ராஜ்கமல் நடிகர் என்பதால் நான் நடிப்பதற்கு நிறைய என்கரேஜ் செய்வார். இந்த மாதிரி கேரக்டர் செய்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுவார். நான் பெரியதிரை படங்களில் நடிப்பதுகூட அவர் கொடுத்த ஊக்கம்தான். அவரும் இதே இண்டஸ்ட்ரியில் இருப்பதனால், இதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை அவரால் ஈசியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது.

    இப்பொழுது ஜெயா டிவியில் ஸ்டார் கிச்சன்' நிகழ்ச்சியை நாங்கள் இருவருமே தொகுத்து வழங்குகிறோம். அந்த நிகழ்ச்சியில் ஒருநாள் ஜாலியாக சமைத்துவிட்டு வரலாம் என்றுதான் போனோம். எங்களுடைய கலாட்டாவை பார்த்து விட்டு வாரா வாரம் தொகுத்து வழங்கச் சொல்லி விட்டார்கள். அது ஈசியாக இருக்கிறது. குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வேலையை செய்ய முடிகிறது. சீரியல் என்றால் 30 நாளும் வேலை இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது எளிதானது.

    இரண்டு சின்னக்குழந்தைகள் இருப்பதால் அவர்களை கவனிக்க அதிக நேரம் வேண்டும் என்பதால் இப்போதைக்கு புதிதாக சீரியல் எதிலும் கமிட் ஆகவில்லை. ஏனெனில் நான் நல்ல நடிகையாக இருப்பதை விட நல்ல அம்மாவாக இருப்பதையே விரும்புகிறேன் என்று பொறுப்பாக சொன்னார் லதாராவ்.

    English summary
    Our love has no thrill and any turning points. It was a normal affair ended in marriage, says TV actress Latha Rao who has been married to Actor Raj Kamal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X