பெப்பர்ஸ் டிவியில் படித்ததில் பிடித்தது
பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் வியாழன் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்" படித்ததில் பிடித்தது "நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் பல துறை சார்ந்த பிரபலங்கள், வல்லுனர்கள் தாங்கள் படித்த புத்தகங்களில் பிடித்த விஷயங்களைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பத்திரிகையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 75 ஆவது எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

தமிழச்சி தங்கப்பாண்டியன்
இந்த வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் முன்னணி எழுத்தாளர் மற்றும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று உரையாடுகிறார் .

கவிஞரானது எப்படி?
இவர் தாம் பள்ளி பருவம்,கல்லூரி பருவ நாட்களில் படித்த புத்தகங்கள் தன்னை கவிஞர் ஆக்க ஊக்குவித்த அனுபவத்தையும் , தான் ரசித்து படித்த நூல்களைப்பற்றியும் உரையாடுகிறார்.

பெரியார் தொடங்கி வெற்றிமாறன் வர
தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையனாள் ? சத்யஜித்ரே இயக்கிய சாருலதா திரைப்படத்தை எழுத்தாளர் குலசேகரன் நாவலாக வடிவமைத்த விதத்தையும் ,மொழி பெயர்ப்பு நாவலான ஓநாய் குல சின்னம் நாவலை இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கமுயலும் முயசியைப்பற்றியும்,திராவிட இயக்க நூல்களை பற்றியும் தொகுப்பாளர் ரஞ்சனுடன் உரையாடுகிறார்.

புத்தகப் பிரியர்களுக்கு
மேலும் பல சுவையான இந்நிகழ்ச்சியை புத்தக பிரியர்களுக்கு வாரம்தோறும் அறிய புத்தங்களை அறிமுகப்படுத்தும் பயனுள்ள நிகழ்ச்சி படித்ததில் பிடித்தது என்கிறார் இதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் K. ஆனந்தராஜ்.


Click it and Unblock the Notifications











