twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு...பாக்யலட்சுமியில் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட் இது தான்

    |

    சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் தமிழ் டிவி சீரியல் ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. சீரியல் முடிய போகிறதா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

    விஜய் டிவி.,யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் தான் இன்றைய தேதியில் அதிகமானவர்களால் பார்க்கப்படும் சீரியலாக உள்ளது. டிஆர்பி.,யில் முதலிடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான். இந்த சீரியலின் லீட் ரோல் பாக்யலட்சுமியாக இருந்தாலும், கோபி ரோலில் நடிக்கும் சதீஷ் தான் பலரின் ஃபேவரைட். இவருக்காகவே இந்த சீரிலை பார்ப்பவர்கள் தான் அதிகம்.

    ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ? ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ?

    உண்மையை உளறும் கோபி

    உண்மையை உளறும் கோபி

    அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில், மூர்த்தி-தனம் சொன்ன தகவலால், கோபியிடம் அவரின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என அடம்பிடிக்கிறார் ராதிகா. முடியாது என சண்டை போடும் கோபியை ராதிகா வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். வருத்தத்தில் குடித்து விட்டு ராதிகாவின் வீட்டிற்கு வரும் கோபி, பாக்யா தான் தனது மனைவி என்ற உண்மையை உளறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகா, கோபியை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார்.

    பாக்யாவிடம் வசமாக சிக்கும் கோபி

    பாக்யாவிடம் வசமாக சிக்கும் கோபி

    குடி போதையில் தனது வீட்டிற்கு வரும் கோபி, தூக்கத்தில் ராதிகா பற்றி மறைமுகமாக உளறுகிறார். இதனால் பாக்யாவின் சந்தேகம் அதிகரிக்கிறது. இரவில் போதையில் நடந்தது ஏதும் நினைவில் இல்லாததால் என்ன நடந்தது என புரியாமல் தவிக்கிறார். ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் கோபியிடம், அவர் கோபமாக பேசுகிறார். போதையில் உளறியதை நினைவுபடுத்துகிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறார் கோபி. இப்படி செம த்ரில்லிங்காக சென்று கொண்டிருக்கிறது.

    ராதிகாவை சந்திக்கும் பாக்யா

    ராதிகாவை சந்திக்கும் பாக்யா

    இந்நிலையில் புதிய ப்ரோமோவாக ராதிகாவின் வீட்டிற்கு சென்று பாக்யாவை சந்திப்பது போன்ற போட்டோ வெளியோகி உள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது, எதற்காக இவர்கள் சந்திக்கிறார்கள், ராதிகா, கோபி பற்றிய உண்மையை பாக்யாவிடம் சொல்வாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலாக, ராதிகா வீட்டிற்கு வரும் பாக்யா, தனது கணவரின் நடவடிக்கை பற்றி வருத்தமாக பேசி புலம்புகிறார். இதனால் மனமுடைந்த ராதிகா, பாக்யாவிற்காக கோபியை விட்டு தர முடிவு செய்கிறார்.

     என்ன செய்ய போகிறார் கோபி

    என்ன செய்ய போகிறார் கோபி

    இதனால் பாக்யா, ராதிகாவை தாண்டி இனி கதை முழுவதும் கோபியை நோக்கி திரும்ப உள்ளது. கோபி அடுத்து என்ன போகிறார். கோபியை பிரிய ராதிகா எடுக்கும் அதிரடி முடிவால் கோபி இனி என்ன செய்ய போகிறார் என்பது தான் இனி வரும் எபிசோட்களில் காட்டப்பட உள்ளது.

    English summary
    According to sources, Bhagya meets Radhika and shared her confusion about her husband's attitude. Radhika breaks down and decided to go away from Gopi's life. These new twist will telecast in upcoming episodes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X