ரைசாவிடம் அசிங்கப்பட்ட கட்டிப்புடி மன்னன் சினேகன்: ஒர்க்அவுட் ஆகல
சென்னை: இன்று பிக் பாஸ் வீட்டில் ரைசாவுக்கும், சினேகனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் யாராவது இரண்டு பேருக்கு இடையே கண்டிப்பாக மோதல் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் தான் டிஆர்பி ஏறும் என்பது கூடவா பிக் பாஸுக்கு தெரியாது.
இந்நிலையில் தான் இன்றும் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏய்
ரைசா சினேகனை பார்த்து ஓய்,ஏய் என்று என்னை கூப்பிடும் வேலை வச்சுக்காதீங்க. அது செல்லமா கூப்பிட்டாலும் ஏய் என்பது எனக்குப் பிடிக்காது என்கிறார்.

சினேகன்
சினேகனும், வையாபுரியும் புறம் பேசுகிறார்கள். மத்தவங்கள மதிக்கத் தெரியணும், அவ கூட பேசாதீங்க, இந்த பக்கம் அவ வரட்டும் என்று வையாபுரி வீராப்பாக பேசுகிறார்.

ரைசா
இன்றைய ப்ரொமோவில் ஓவியாவை காட்டவில்லை. அதற்கு பதிலாக ரைசாவையே காட்டுகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ரைசா எதுவுமே பேசுவது இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில் அவர் இன்று பேசியுள்ளார்.

பொறுக்கி
சினேகன் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களை நேரம் கிடைக்கும் போது எல்லாம் இறுக்கி அணைத்துக் கொள்கிறார். என்னய்யா இந்த ஆளு இப்படி அசிங்கம் பண்றார் என்று பார்வையாளர்கள் முகம் சுளிப்பது பிக் பாஸுக்கு ஏனோ தெரியவில்லை. இல்லை தெரிந்தும் தெரியாதது போன்று நடிக்கிறாரா?

கேவலம்
சினேகனின் நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை. ஆரவை குறை சொல்லும் சினேகன் தான் பெண்களை பார்த்தால் பாய்ந்து போய் கட்டிப்பிடிக்கிறார், தடவுகிறார். இந்த அசிங்கத்தை எல்லாம் கமல் ஹாஸன் ஏன் என கேட்க மாட்டாரா? ஆண்டவரே, உங்களின் கட்டிப்புடி வைத்தியத்தை சினேகன் கண்டமேனிக்கு பயன்படுத்துகிறார். கொஞ்சம் அடக்கி வைங்க அவரை.


Click it and Unblock the Notifications











