Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புஸு... புஸு... பாம்பைத் துரத்தும் சீரியல் இயக்குநர்கள்!
சென்னை: வெள்ளித்திரையில் பேய் பிடித்து ஆட்டுகிறது என்றால், சின்னத்திரையில் பாம்பு துரத்தித் துரத்திக் கொட்டுகிறது.
சமீபகாலமாக சீரியல்களில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் புதுப்புது பாம்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர் இயக்குநர்களும்.
நாகராணி...
ஜீ தமிழில் தினமும் மாலை நாகராணி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. நாக கன்னியைப் பற்றிய கதை இது.
கேளடி கண்மணி...
இதேபோல், சன் டிவியில் மாலையில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் முதலில், நல்ல குடும்பக் கதையாகத் தான் சென்று கொண்டிருந்தது. பின்னர், அதில் திடீரென நாகம் ஒன்று புகுந்தது.
நாகத்தின் பாதையில்...
தற்போது அந்த நாகத்தை வைத்தே அந்த சீரியலின் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. எப்படியோ தொடங்கிய சீரியல், தற்போது எப்படியோ வேறு பாதையில் பயணித்து வருகிறது.
நாகினி...
இந்த சூழ்நிலையில், சன் டிவியில் புதிதாக நாகினி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவும் நாகக்கன்னி பற்றிய கதைதான்.