புஸு... புஸு... பாம்பைத் துரத்தும் சீரியல் இயக்குநர்கள்!
சென்னை: வெள்ளித்திரையில் பேய் பிடித்து ஆட்டுகிறது என்றால், சின்னத்திரையில் பாம்பு துரத்தித் துரத்திக் கொட்டுகிறது.
சமீபகாலமாக சீரியல்களில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் புதுப்புது பாம்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர் இயக்குநர்களும்.

நாகராணி...
ஜீ தமிழில் தினமும் மாலை நாகராணி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. நாக கன்னியைப் பற்றிய கதை இது.

கேளடி கண்மணி...
இதேபோல், சன் டிவியில் மாலையில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் முதலில், நல்ல குடும்பக் கதையாகத் தான் சென்று கொண்டிருந்தது. பின்னர், அதில் திடீரென நாகம் ஒன்று புகுந்தது.

நாகத்தின் பாதையில்...
தற்போது அந்த நாகத்தை வைத்தே அந்த சீரியலின் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. எப்படியோ தொடங்கிய சீரியல், தற்போது எப்படியோ வேறு பாதையில் பயணித்து வருகிறது.

நாகினி...
இந்த சூழ்நிலையில், சன் டிவியில் புதிதாக நாகினி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவும் நாகக்கன்னி பற்றிய கதைதான்.


Click it and Unblock the Notifications











