Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
களைகட்டும் சின்னத்திரை சங்க தேர்தல்: மும்முனை போட்டி - டிச.13ல் வாக்குப்பதிவு
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக லியாகத் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார் டிசம்பர் 13ம் தேதி விருகம்பாக்கத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர்களின் சங்கத்திற்கான நிர்வாகிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டி இருந்தால், தேர்தல் நடைபெறும். சங்கத்தில், 1,300 உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த, 2014ல், நடைபெற்ற தேர்தலில், நளினி தலைவராகவும், 23 நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின், கருத்து வேறுபாட்டால், நளினி உள்ளிட்ட, 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் நடந்த பொதுக்குழுவில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, டிசம்பர் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று அணிகளுக்குகிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
பானுபிரகாஷ், மனோபாலா, டில்லி கணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் மற்றொரு அணியாகவும், ரவிவர்மா, கனகப்பிரியா ஆகியோர், மூன்றாவது அணியாகவும் போட்டியிடுகிறது.
தேர்தல் அதிகாரியாக லியாகத் அலிகான் நியமிக்கப்பட்டு உள்ளார். டிசம்பர் 13ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள, ஏ.கே.ஆர்., மகாலில், காலை 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.