Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பகுத்தறிவுப் பாதைக்கு மாறிய 14 வயது… கமலின் டைரிக் குறிப்பு
சன் மியூசிக் சேனலில் இந்த வாரம் சனி, ஞாயிறு இரவு கோலிவுட் டயரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது டயரி பக்கங்களை புரட்டிப் பார்த்தார்.
சிறுவயதில் தான் படித்த போது செய்த சேட்டைகள். பள்ளியில் விழுந்து அடிபட்டது. படிப்பில் ஆர்வமில்லாமல் நடனம் கற்றுக்கொண்டது என சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு வந்தார்.
ஏழு முதல் 14 வயதுவரை தன் வாழ்க்கையில் நடந்ந விசயங்களை கூறிய கமல், பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தன்னுடைய அப்பா அழைத்துச் சென்றபோது, அவர் செல்லமாக தன்னை 'கூத்தாடி' என்று கூப்பிடுவதை நினைவு கூர்ந்தார். காமராஜரின் வாக்கு இன்றைக்கு வரைக்கும் பலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
தன்னுடைய 14 வயதில்தான் ஆன்மீகப் பாதையில் இருந்து பகுத்தறிவுப் பாதைக்கு மாறும் சம்பவம் நடைபெற்றது என்று கூறினார். தந்தைப் பெரியாரின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற நண்பர்கள் மூலம் தன் வாழ்க்கைப் பயணம் வேறு பக்கம் திரும்பியது என்றார்.
தன்னுடைய 16 வயதில் அப்பாவிடம் போய் எப்போ எனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறீங்க என்று கேட்டதாகவும், அதற்கு அவர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறிய கமல், பேசாமல் கல்யாணம் ஆகாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.
ரோட்டோரத்தில் நின்று சைட் அடிப்பது பிடிக்காது என்று கூறிய கமல் காதல் என்ற உணர்வு நம்மை தாக்கும் போது நமக்கானவரை நாம் சைட் அடிக்கலாம் என்றார்.
சிறுவயது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்க்கையில் நடந்த விசயங்களை சுவாரஸ்யமாக தெரிவித்த கமல் ஹாசனை பேட்டி கட்ட தொகுப்பாளினிக்குதான் சுவாரஸ்யமாக கேள்விகளைக் கேட்கத் தெரியவில்லை.
நடனம் பயின்று வெளிமாநிலங்களுக்கு நடனமாடப் போனபோது கால் ஒடிந்த கதையை கமல் கூறும் போது எந்த வித எக்ஸ்ப்ரசனும் அந்த தொகுப்பாளினியிடம் வெளிப்படவில்லை. அனைத்து சம்பவத்திற்கும் அவர் ஒகே என்று மட்டுமே கூறிக்கொண்டிருந்தது நிகழ்ச்சிக்கு திருஸ்டி பரிகாரமாக இருந்தது என்றே கூறவேண்டும்.
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!