Don't Miss!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மெகா சீரியலை தயாரிக்கும் சுந்தர் சி
சென்னை: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என வெள்ளித்திரையில் பன்முக திறமை கொண்ட சுந்தர் சி, தற்போது தொலைக்காட்சி தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 2 படத்தை தொடர்ந்து சங்கமித்ரா என்ற படத்தினை இயக்கி உள்ளார். பல கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் சுந்தர் சி-க்கு கனவு படமாம். அதனால் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் வேலையில் பிஸியாக உள்ளார். இந்த படத்தினை முடிக்க எப்படியும் இரண்டு வருடங்கள் ஆகுமாம்.
இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகும். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில், சூர்யாவை முதலில் படக்குழு அணுகியது. சூர்யா மறுத்துவிட்டதால், இப்பொழுது ஜெயம் ரவியை படக்குழு அணுக திட்டமிட்டுள்ளது.
படத்தின் அனைத்து முன் வேலைகளும் நடக்கும் இதே வேளையில், சுந்தர் சி நான்கு மொழிகளில் உருவாகவிருக்கும் ஒரு தொலைக்காட்சி தொடரை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ராஜ் கபூர் மற்றும் செல்வா ஆகியோர் இணைந்து இயக்கும் இது ஹாரர் மற்றும் த்ரில்லர் தொடராகும். இந்த ஹாரர் தொடரை யு கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.