Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீங்க எல்லாம் எங்க இருந்துயா வர்றீங்க? கலகலக்கும் டிவி சீரியல் வசனங்கள்!!
சென்னை: சின்னத்திரையில் அழுகாச்சி சீரியர்கள்... அடுத்தவர்கள் குடியை கெடுக்கும் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வசனங்களில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மரகத வீணை' என்ற மொக்கை சீரியலில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும், ஏட்டம்மாவும் பேசிகொள்ளும் வசனங்கள் இருக்கே.... அட அட அட அந்த வசனங்களை எழுதிய கைக்கு மோதிரம்தான் போடணும்.
பல்பு வசனங்கள்
சரசு உடன் திருமணமான சுப்புவை காதலிக்கும் சப் இன்ஸ்பெக்டர் கவிதா, செய்யும் வில்லத்தனங்கள்தான் சீரியலின் முக்கிய அம்சம். இதற்காக காஞ்சிபுரத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போனது முதல், சென்னைக்கு மறுபடியும் மாற்றலாகி வந்தது வரை அதிரடிதான்.
கரண்டு இருக்கிற இடத்திலதான்…
ஏம்மா காஞ்சிபுரத்தில இருந்து சென்னைக்கு மறுபடியும் மாற்றலாகி வந்தீங்க? என்று கவிதாவிடம் ஏட்டம்மா கேட்கவே, கரண்ட் இருக்கிற இடத்திலதான் பல்புக்கு வேலை என்கிறார்.
குண்டுபல்பு
அம்மா இப்ப எல்லாம் குண்டு பல்புக்கு வேலையில்லை தூக்கி போட்டுட்டாங்க. எல்இடி பல்புதான் என்று வசனம் பேச... நானா குண்டு பல்பு... நீ என்னமோ டியூப் லைட் மாதிரி ஒல்லியா இருக்கியோ என்று கேட்கிறார்.
நீங்க எல்இடி பல்பு
நான் சரசுவை சொன்னேன்... அவதான் குண்டு பல்பு மாதிரிதான் இருக்கா. நீங்க எல்இடி பல்பு மாதிரி அழகா இருக்கீங்க என்று கூறி ஐஸ் வைக்கிறாள்.
ஃபேஸ்புக், டுவிட்டர்
இன்றைக்கு பேசிய வசனமோ அதைவிட காமெடி... இப்ப எல்லாம்.. தும்மினா கூட டுவிட்டல்தான் முகம் பார்த்தா கூட ஃபேஸ்புக்லதான் பார்க்கறாங்க... வண்டை வண்டையா திட்னா கூட வாட்ஸ் அப்லதான் திட்றாங்க என்று போகிறது வசனம்.
இப்படி எல்லாம் எப்படி எழுதறாங்க... எங்கதான் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?