Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹேமாவோட அம்மா நான்தான்.. உண்மையை போட்டுடைத்த கண்ணம்மா.. அதிர்ச்சியான பாரதி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்துவந்த பாரதி கண்ணம்மா தொடர்ந்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 8வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா, அவர்களது குழந்தைகளை வைத்தே கதையை கொடுத்து வருகிறது இந்த தொடர்.
இதனால் இந்தத் தொடர் எப்போது முடியும் என்று ரசிகர்களே எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.
முன்னாள் மனைவிகள் குறித்து பேசிய பாலிவுட் ஹீரோ: அவரால மட்டும் தான் இப்படியெல்லாம் பேச முடியும்!
விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவியில் எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு இணையாக தொடர்களும் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் முக்கியமான தொடராக முதன்மை தொடராக தற்போது மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கடந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர்
இந்த வாரத்தில் சன் டிவியின் கயல் தொடர் முதலிடத்தை பிடித்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி ஒரு இடம் கீழே இறங்கி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா தற்போது டிஆர்பியில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
ரசிகர்கள் சலிப்பு
ஒரே மாதிரியான காட்சி அமைப்புகள் இந்தத் தொடர்குறித்து ரசிகர்கள் சலிப்படைய செய்துள்ளன. இதனிடையே இடையில் பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலைக்கு சேர்வதாகவும் அதன்மூலம் இருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளையும் காட்சிப் படுத்தியிருந்தார் இயக்குநர்.
மகா சங்கமம்
ஆனால் அந்த எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை இந்நிலையில் தற்போது ராஜா ராணி தொடருடன் இணைந்து மகா சங்கமத்தில் பாரதி கண்ணம்மா தெடர். சுற்றுலா போன இடத்தில் அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளில் பாரதியும் கண்ணம்மாவும் துணையாக இருக்கின்றனர்.
ஹேமா -லக்ஷமி பிறந்தநாள்
இந்நிலையில் தற்போதைய எபிசோடில் ஹேமா மற்றும் லக்ஷ்மியின் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை காட்ட வேண்டும் என்று ஹேமா கேட்க, அதற்கு பாரதியும் ஒப்புதல் தெரிவிக்கிறார்.
கொதித்தெழும் கண்ணம்மா
கோபத்தில் பொங்கியெழுகிறார். கோபத்துடன் தான்தான் ஹேமாவின் அம்மா என்பதை கண்ணம்மா கோபத்துடனும் ஆத்திரத்துடனும் வெளிப்படுத்துகிறார். தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் அதில் ஒன்றை சவுந்தர்யா எடுத்து சென்று பாரதி வளர்க்க கொடுத்ததாகவும் கண்ணம்மா கூறுகிறார். ஒரு தாய்க்கு அநியாயம் நடப்பதாகவும் கண்ணம்மா தெரிவிக்கிறார்.
அதிர்ச்சிக்குள்ளாகும் பாரதி
இதையடுத்து பாரதி மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று தன்னுடைய அம்மாவிடம் கேட்கிறார். கண்ணம்மா கூறுவது உண்மைதான் என்பதை சவுந்தர்யாவும் தெளிவுப்படுத்துகிறார். ஹேமாவை ஆதரவற்ற இல்லத்திலிருந்து எடுத்து வந்ததாக நினைத்த நிலையில், இந்த விஷயம் பாரதிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது.