Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராதிகா வீட்டிற்கு போகும் கோபி...கொந்தளிக்கும் குடும்பம்...அடுத்து என்ன நடக்க போகுது தெரியுமா?
சென்னை : டிவி சீரியல்களின் விளம்பரங்களில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் தான்.
குடும்ப தலைவிகள் படும் கஷ்டங்களை காட்டுவதாக சொல்லப்பட்ட இந்த சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளுடன், அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் டிஆர்பி கூடி வருகிறது.
கோபி -ராதிகா உறவு பற்றி அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. பாக்யாவும் கோபியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி விட்டு, அவர் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்.
ராதிகாவை
சந்திக்கும்
பாக்யா...பாக்யலட்சுமி
சீரியலில்
அடுத்து
என்ன
நடக்க
போகிறது
?

கோபியின் புதிய டிராமா
வீட்டை விட்டு சென்ற கோபி நேராக ராதிகாவை சந்தித்து, உனக்காக தான் வீட்டை விட்டு வந்தேன். உனக்கை திருமணம் செய்ய நினைத்ததால் தான் எனக்கு இந்த நிலை. நீயும் என்னை ஏற்காவிட்டால் நான் செத்து விடுவேன் என புதிய டிராமாவை ஆரம்பிக்கிறார். கோபி வெளியே சென்ற அடுத்த நிமிடம் கோபியின் அப்பா ராமமூர்த்தி, ராதிகா வீட்டிற்கு வந்து சத்தம் போடுகிறார். ஆனால் ராதிகாவின் அண்ணனும் பதிலுக்கு சத்தம் போட்டு, ராமமூர்த்தியை வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

கோபி தான் பாவம்
வீட்டில் உள்ளவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் கோபி வெளியே வந்து விட்டார். கோபி தான் பாவம் என ராதிகாவின் அண்ணன் சொல்ல, ராதிகாவை அதை ஆமாம் என்று சொல்லி, யோசிக்க துவங்குகிறார். அங்கு வீட்டில் உள்ள அனைவரும் பாக்யா மீது கோபத்தை காட்ட, எழில் வழக்கம் போல் அம்மாவிற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இப்படி கடந்த வார எபிசோட் முடிவடைய, வரும் வார எபிசோடிற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ராதிகா வீட்டில் ஈஸ்வரியின் ஆட்டம்
அதில், வீட்டை விட்டு போன கோபி நேராக ராதிகா வீட்டிற்கு போனதை ஈஸ்வரியிடம் சொல்கிறார் ராமமூர்த்தி. ஈஸ்வரி அந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்லி, அவரை திட்டுகிறார்.அதோ நிற்காமல் ராதிகா வீட்டிற்கு போய் ரூம், ரூமாக சென்று கோபியை தேடி பார்க்கிறார். கோபியை நாங்கள் ஒழித்து வைக்கவில்லை என ராதிகா வீட்டில் உள்ளவர்கள் ஈஸ்வரியிடம் சொல்கிறார்கள். பதிலுக்கு ஈஸ்வரியும் சண்டை போட்டு, கோபியை ஒழித்து வைத்து உன் மகளை வாழ வைக்கலாம் என நினைக்காதே. அதை நடக்க விட மாட்டேன். நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள் என மீண்டும் சாபம் கொடுக்கிறார்.

ஆரம்பிச்சுட்டாங்கப்பா
இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, போதும் நிறுத்துங்கள் என சொல்லி கத்துவதுடன், ஈஸ்வரியையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதற்கு பிறகு வழக்கம் போல் ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் கோபிக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதனால் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பமடைகிறார் ராதிகா.இது தான் வரும் வாரத்தில் பாக்யலட்சுமி சீரியலில் நடக்க போகிறது.

இப்படி 4 குடும்பம் இருந்தால் போதும்
இதை பார்த்த நெட்டிசன்கள், ராதிகா குடும்பம் போல 4 குடும்பம் இருந்தால் போதும் நாட்டில் இருக்க அத்தனை குடும்பமும் நாசமாக போய் விடும். ராதிகாவிற்கு என்று சுய புத்தியே கிடையாது. யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டி, அவர்கள் சொல்வது போலவே மாறி விடுவாரா? ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகி விட்டது என தெரிந்தும் பழகுகிறார். அவரது குடும்பம் யார், மனைவி யார் என தெரிந்து கொள்ள கூடவா நினைக்க மாட்டார்? இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் ராதிகா - கோபி கல்யாணம் நடக்கனும்னு ராதிகாவோட அம்மாவும், அண்ணனும் பிடிவாதமாக பேசுவது ரொம்ப ஓவரா இருக்கு என திட்டி தீர்க்கிறார்கள்.

கல்யாணம் நடக்குமா? நடக்காதா?
இன்னும் சிலர், இந்த வாரமும் சண்டை தானா? உங்க சண்டை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க. முதலில் கோபி - ராதிகா திருமணம் நடக்குமா? நடக்காதா? அதற்கு பதில் சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியல. அடுத்து என்ன நடக்கும் என நாங்க ஒன்று யோசித்தால், ட்விஸ்ட் என்ற பெயரில் நீங்கள் ஒன்றை மாற்றி விடுகிறீர்களே என ஆர்வ மிகுதியால் கேள்வி எழுப்பி வருகின்றனர்.