'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா எங்கே?: கண்ணுல தண்ணி வுட்ட ரசிகர்கள்
சென்னை: கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவுக்கு விரைவில் திருமணமாம். அதனால் தான் அவர் அந்த தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமித் பார்கவ், ப்ரியாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அதிலும் குறிப்பாக ப்ரியாவை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

ப்ரியா
கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சியை பார்த்து பலருக்கு ப்ரியா பைத்தியம் பிடித்துவிட்டது. அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துவிட்டார் ப்ரியா. இந்நிலையில் அவர் திடீர் என கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சிக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

திருமணம்
ப்ரியா ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார். அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராஜ்வேலை திருமணம் செய்யத் தான் ப்ரியா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மிஸ் யூ
ப்ரியா இல்லாமல் கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மீம்ஸ்
#DeMonetisation அப்போ கூட ATM வாசல் க்யூல கல்லு மாரி நின்ன பசங்க,கல்யாணம் முதல் காதல்வரைல நீங்க ப்ரியாவ மாத்துனதும் கண்ணுல தண்ணி வுட்டானுங்க


Click it and Unblock the Notifications











