Just In
- 1 hr ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 1 hr ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 3 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 4 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- News
கடவுள் ஜோ பிடனுக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பார்... இவாங்கா ட்ரம்ப் வாழ்த்து!
- Finance
பட்ஜெட் 2021: மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்.. மோடி அரசு நிறைவேற்றுமா!!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!!
- Lifestyle
யாரெல்லாம் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது தெரியுமா? உஷாரா இருங்க...!
- Sports
திறமைக்கு சல்யூட்.. என்ன ஒரு உறுதி.. இந்திய அணிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் எழுதிய ஓபன் லெட்டர்!
- Automobiles
விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்!

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி.
நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நன்றி :
'மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
நான் சுயநலவாதியா :
சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. கணேஷ், ஹரீஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.

கமல் கொடுத்த ஊக்கம் :
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்துப் பேசும்போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க வருவதில் மகிழ்ச்சி.

உண்மை ஜெயிக்கும் :
எனக்கு ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை ஜெயிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஓட்டுப் போடும்போது கவனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.