சத்யா கர்ப்பம் இல்லை… சொல்ல முடியாமல் தவிக்கும் பிரபு… விறுவிறுப்பான சத்யா சீரியல் !
சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரில் வரும் வாரங்களில் பல திருப்பங்கள் நடக்க உள்ளன.
சத்யா கர்ப்பம் இல்லை என்கிற தகவலை பிரபு எப்படி அவளிடம் சொல்லப் போகிறான் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!
பல சுவாரசியங்கள் நிறைந்த இத்தொடரில், சாயிஷா மற்றும் விஷ்ணு விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்
இல்லத்தரசிகளுக்கு திரைப்படங்களை பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட சீரியல்களை பார்ப்பதில் மிகவும் ஆவலாக உள்ளனர். இதனால், அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் போட்டி போட்டிக்கொண்டு சீரியலில் விறுவிறுப்பை கூட்டி உள்ளனர்.

பின்னடைவு
கொரோனாவின் இரண்டாவது அலையால் தொலைக்காட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. தற்போது மீண்டும் வழக்கம் போல அனைத்து தொடர்களும் விறுவிறுப்பாக பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன.

சத்யா
அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவை பெற்ற சத்யா தொடர் வரும் வாரங்களில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. சத்யாவுக்கும் பிரபுவுக்கும் ரொமான்ஸ் அடுத்தடுத்த கட்டத்தில் மிகவும் சுவாரசியமாக நகர்கிறது.
Recommended Video

தவிக்கும் பிரபு
சத்யா கர்ப்பமாக இல்லை, நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்பதை திவ்யா பிரபுவிடம் கூறுகிறார். இதனை உறுதி செய்ய பிரபு சத்யாவிற்கு ஸ்கேன் செய்து டாக்டரிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்கிறான் பிரபு. ஆனால் ,சத்யாவோ கர்ப்பமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார். கர்ப்பமாக இல்லை என்ற செய்தியை சத்யாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான் பிரபு. இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











