வெளிச்சத்திற்கு வந்த சந்திரகலாவின் உண்மை முகம்.. நவீனை காப்பாற்றிய கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் துர்கா, என் கணவரும் நவீனுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரை என் அம்மா சாமுண்டீஸ்வரி தான் ஏதோ செய்து விட்டால் என பழி கூட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைகின்றனர். இன்றைய எபிசோடில், குழிக்குள் இருக்கும் நவீன், மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என காட்டுகிறான். நவீனுக்கு தன்னுடைய பாக்கெட்டில் செல்போன் இருப்பது தெரிந்து செல்போனை ஆன் செய்கிறான். அதில், சிக்னல் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்க அவசர அழைப்பு 100க்கு போன் செய்து தன்னை யாரோ அடித்து மயக்கம் அடைய செய்து குழிக்குள் வைத்து புழைத்து விட்டார்கள். தற்போது நான் ஒரு குழியில் பெட்டிக்குள் இருக்கிறேன். தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள் என சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து, நவீன், கார்த்திக்கிற்கு போன் செய்து, தன்னை சிவனாண்டியும், அவனுடைய சித்தப்பாவும் அடித்து மயக்கமடையச் செய்து பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள் என்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தயவு செய்து பயப்படாதே, நான் நிச்சயம் நீ இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறேன். நீ பயந்தால், உன்னால் பெட்டிக்குள் மூச்சுவிட முடியாது தயவு செய்து அமைதியா இரு என சொல்லிவிட்டு, தன்னுடைய போலீஸ் நண்பன் சரவணனுக்கு ஃபோன் செய்து உதவி கேட்கிறான். அதன் பின் அனைவரும் சேர்ந்து நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவனை காப்பாற்றி விடுகின்றனர். அப்போது, நவீன், சாமுண்டீஸ்வரி அத்தையை பழிவாங்க வேண்டும் என்பதற்கான சிவனாண்டி தான் இந்த வேலையை செய்தான் என சொல்கிறான்.
சந்திரகலாவின் திட்டம்: அப்போ, கார்த்திக், இதுக்கு மேல சிவனாண்டியையும் சந்திரகலாவையும் சும்மா விடக்கூடாது என்று ஒரு திட்டம் போடுகிறான். நவீன் கிடைத்துவிட்டது யாருக்கும் தெரிய வேண்டும், அவன் காணாமல் போனதாகவே இருக்கட்டும், அப்போது தான் இந்த சதியில் சந்திரகலாவிற்கும் தொடர்பு இருக்கு என்று சாமுண்டீஸ்வரிக்கு சொல்ல முடியும். இல்லை என்றால், இது எல்லாம் சிவனாண்டியின் வேலை என்ற, சந்திரகலா தப்பித்துவிடுவாள், அவளை இதுக்கு மேல் அந்த வீட்டில் விட்டு வைக்கக்கூடாது, அதற்கு நாம் சரியான திட்டம் போட்டத்தான் அந்த சந்திரகலா சிக்குவாள் என கார்த்திக் சொல்கிறான். இதைக்கேட்டு மயில்வாகனும் அதற்கான வேலையில் ஈடுபடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











