பிணத்தை வைத்து அரசியல் மட்டுமில்ல.. கார்த்திகைதீபம் சீரியலிலும் பிணத்தை வைத்து நடக்கும் பித்தலாட்டம்
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ராஜராஜன், சாமுண்டீஸ்வரியிடம், அம்மா, ரேவதி குண்டு அடி பட்டு இருந்த நேரத்தில், ரேவதி குணமாகி வந்தால், கோவிலுக்கு நிலத்தை எழுதி வைப்பதாக வேண்டி இருக்கிறார்கள். அந்த நிலம் என் பெயரில் இருப்பதால், நம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதில் கையெழுத்துப்போட வேண்டும் என சொல்கிறான். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி நான், அந்த கிழவி கூட வந்த கையெழுத்துப்போடவே மாட்டேன் என்று சொல்கிறாள். இவை அனைத்தையும் சந்திரகலா மறைந்து கேட்பதை கார்த்திக் பார்த்துவிடுகிறான்.
கோவில் கட்டுவதற்கு நிச்சயம் சந்திரகலா பிரச்சனை செய்வாள் அவளை சும்மா விடக்கூடாது, அவள் என்ன திட்டம் போடுகிறாள் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும் என நினைக்கும் கார்த்திக் ஒரு பிளான் போடுகிறான். என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் போது, இந்த நேரம் சாமுண்டீஸ்வரி சூலையிலில் வேலை செய்பவர்களுக்காக இன்றைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், நீங்கள் போய் கொடுத்துவிடுங்க மாப்பிள்ளை என பணத்தை கொடுக்கிறாள். இதைவைத்து ஒரு திட்டம் போடும் கார்த்தக், எனக்கு வேறு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி, அந்த பணத்தை சந்திரகலாவிடம் கொடுத்து அனுப்புகிறான். அந்த பணத்துடனே சந்திரகலாவிற்கு தெரியாமல், தெரியாமல் ஒரு போனையும் ஆன் செய்து, சந்திரகலா யாரை சந்திக்கிறாள், என்ன பேசுகிறாள் என்பதை தெரிந்து கொள்ள திட்டமிடுகிறான்.

மாஸ்டர் பிளான்: பிளான் நல்லாத்தான் இருக்கு நீங்க இன்னைக்கு நைட்டே ஒரு பிணத்தை கொண்டு வந்து புதைத்துவிடுங்கள் என்கிறாள். முத்துப்பாண்டி, நீ கவலையவிடுமா, எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த முறை நாமத்தான் ஜெயிக்கப்போகிறோம் என்கிறார். உடனே சிவனாண்டி, சூப்பர் சித்தப்பா, நல்ல ஐடியா, அந்த கார்த்தியை தோற்கடிக்க அருமையான திட்டம், இந்த திட்டத்தை நாம மிஸ் பண்ணிடவேக்கூடாது என்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











