Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சின்னத் திரை விருதுகள்: தேர்வு செய்ய குழு அமைப்பு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் திட்டம் 2006ம் ஆண்டு தி.மு.க.ஆட்சி அமைந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்ட வருகின்றன.
இதைத்தொடர்ந்து, 2009-2010-ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு சின்னத்திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர் விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட,
ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்குழுவில், இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன்பாலா, கதாசிரியர் கண்மணிசுப்பு,தயாரிப்பாளர் டி.வி.சங்கர், நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் ராஜசேகர், நடிகை நித்யா ரவீந்தர் ஆகியோரை அலுவல்சாரா உறுப்பினர்களாகவும்,
தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.