Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் பாதிக்கும்! - தீபிகா
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டமும் உதவியது.
அந்தப் போட்டியின் முடிவில் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில், 'கிரிக்கெட் ஆட்டத்தில் எனக்கு நெருக்கடி வரும் போது ஒருவரை ஞாபகப்படுத்துவேன். உடனே உற்சாகம் கிளம்பும். அவர் யார் என்பதை இறுதியில் சொல்கிறேன்,' என்றார்.
யுவராஜ்சிங் ஞாபகத்தில் வருபவர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் தீபிகா படுகோனே என்று மும்பை பத்திரிகைகள் கிசுகிசு வெளியிட்டுள்ளன. அவரை மனதில் வைத்து தான் யுவராஜ்சிங் பேசியதாக கூறப்பட்டது.
இதுபற்றி தீபிகா படுகோனே கூறுகையில், "யுவராஜ்சிங் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசியே பல நாட்கள் ஆகி விட்டன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிக்காக அவர் போராடி வருகிறார். அவரையும் என்னையும் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது.
எங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஞாபகத்தில் வருபவர்கள் பெற்றோராகக் கூட இருக்கலாமே. அல்லது சச்சின் டெண்டுல்கராக இருக்கலாம். நான் ஞாபகத்தில் வரும் அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய உறவு இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் யுவராஜ்சிங் மனிதை காயப்படுத்தும். இதனால் நன்றாக விளையாட முடியாமல் போகலாம்.
இந்திய அணியை ஜெயிக்க வைத்து உலக கோப்பையை அவர் கொண்டு வர வேண்டும். அதை சச்சினுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதுவே இப்போதைய பிரார்த்தனை," என்றார் அவர்.