Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எல்லாம் முடிஞ்சு போச்சு.. ஆனாலும் ஒரு பயம்...!
சென்னை: பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து பலவருட போராட்டத்திற்குப் பின் வெளிவர இருக்கிறது விரல் நடிகரின் படம், கடந்த முறை எல்லாம் முடிந்து படம் வெளியிட சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் உள்ளே புகுந்த நிறுவனம் பயங்கர பிரச்சினையை உண்டு பண்ணி படத்தை வெளியிட முடியாமல் செய்து விட்டது.
படம் மீண்டும் பெட்டிக்குள் முடங்கி விடுமோ என்று எண்ணிய போது தளபதியான அந்த மூன்றெழுத்து நடிகர் வந்து பிரச்சினையை தீர்த்து வைத்தார், படத்தின் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் முடிந்து தற்போது முழு வேகத்துடன் படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
விளம்பரங்களை விறுவிறுப்பாக வெளியிட்டு வரும் படக்குழுவினருக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சிறிய பயம் ஒன்றும் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறதாம்.
வேறு ஒன்றுமில்லை இந்த முறையாவது படம் வெளியாகுமா? அல்லது மீண்டும் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளுமா, என்ற பயம் தற்போது படக்குழுவினரின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.
படம் வெளியாகற வரைக்கும் உள்ளுக்குள்ள இந்த மாதிரி பயமெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்ன செய்யுறது...